மேனகா மூக்காண்டி
நாள் முழுவதும் தொடர்ந்து மழைபெய்த போதிலும் எமது நாட்டு அரசியல் குளிர்ச்சியடைவதாக தெரியவில்லை. அமைச்சர் மிலிந்த மொரகொடவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கை யில்லாப் பிரேரணை எனும் நெருப்புத் தணல் அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீது புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் தற்காலிகமாக அணைந் துபோயுள்ளது. ஆனால் இத்தாக்குதல் தற்போது அரசியலைத் தீப்பிழம்பாக்கி யுள்ளமைதான் அடுத்தபிரச்சினையாகும்.
கடந்த வாரமளவில் யால சரணாலயத்தில் வைத்து அரசபடையினருக்கு எதிராக புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலா னது தெற்கில் மேற்கொள்ளப்பட்ட முதலா வது கெரில்லாத் தாக்குதல் என்று குறிப்பிடப்பட்டது. தொப்பிகலையிலிருந்து தப்பிச்செல்லும் புலி கெரில்லாக்களாலே யே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இராணுவப் பேச்சாளர்; குறிப்பிட்டிருந்தார்.இத்தாக்குதலின் வடு மாறுவதற்குள் அ நுராதபுரம் விமானப்படைத்தளத்தின் மீது தரை மார்க்கமாகவும் ஆகாயமார்க்கமா கவும் புலிகள் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இலங்கையின் அரசியலில் மிகக் கொந்தளிப்பான ஒரு காலகட்டத்தில் இத்தாக்குதல் அரச மற்றும் பாதுகாப்புத் தரப்பினரால் சற்றும் எதிர்பாராதவகையில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றமை உள்நாட்டு மற்றும் சர்வதேச அரங்குகளில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால் ஏற்பட்டிருக்கும் அளவிடமுடியாத சேதங்கள் மூலம் இலங்கையின் பாதுகாப்புத்துறையின்; கவனயீனம் தெ ளிவாக எடுத்துக்காட்டப்படுகிறது. கிழக்கில் இருந்த இறுதி புலி உறுப்பினரை யும் விரட்டிவிட்ட சந்தோஷத்தில் விழாக் கொண்டாடிக் கொண்டிருந்த பாதுகாப்புத் துறைக்கு இத்தாக்குதல் பேரிடியே அன்றி வேறில்லை. இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்த முடியாத அளவுக்கு புலிகள் துவண்டு போய்விட்டனர் என்றே தெரிவிக்கப்பட்டது. புலி உறுப்பினர்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு பகுதிக் காடுகளில் மறைந்து இருப்பதாகவும் அதனால் படையினரின் அடுத்த இலக்கு அப்பகுதிகளே என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது அவர்கள் எங்கிருந்து இவ்வாறான தாக்குதல்களை ந டத்தியுள்ளார்கள் என்பதற்கான விளக்கத்தி னை பொறுப்பு மிக்க அதிகாரிகளே கூற வேண்டும். தேசிய பாதுகாப்பு தொடர்பாக அக்கறைகொள்ள வேண்டியவர்கள் விழிப்புடன் இருந்துள்ளார்களா? என்பது கேள்விக்குறியான விடயமே. இந்த கேள்வி யால சரணாலயத்தில் நடத்தப்பட்ட தாக் குதலில் இருந்தே எழுவதாகும். இது குறித்து உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் முன்வைக்கப்பட்டுவரும் விமர்சனங்களை இங்கு நாம் ஒரே பார்வையில் கொண்டுவருகிறோம்.அரச பாதுகாப்புப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல :- விடுதலைப் புலிகளின் விமானப்படை மற்றும் தரைப்படையினர் அநுராதபுர விமானப்படைத் தளத்தின் மீது தொடுத்த தாக்குதலை நாம் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. வடக்கில் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள புலிகள் இவ்வாறான தாக்குதல்களில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் :- கடந்த 1987 ஆம் ஆண்டுக்கு பின் கரும் புலிகளால் நடத்தப்பட்ட பாரிய தாக்குதல் இது. இவ்வாறான தாக்குதல்கள் தொடரும் என்பதை மறுப்பதற்கில்லை. தமிழ் மக்கள் மீது ஈவிரக்கமற்ற தாக்குதல்களை நடத்தி ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் படைத்தரப்புக்கு இது போன்ற அதிர்ச்சிகள் இன்னும் காத்திருக்கின்றன. ஐ.தே.க. எம்.பி. லக்ஷ்மன் செனவிரட்ண:-நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட் டுவிட்டது என்று அரச அதிகாரிகள் தெ ரிவித்திருந்தனர். ஆனால் புலிகளினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் தா க்குதல்களுக்கும் அதனால் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கும் தற்போது பொறுப்பு கூ றுபவர்கள் யார்? அநுராதபுரத்தில் புலிகள் தாக்கியபோது அரசாங்கத்தால் கொள் வனவு செய்யப்பட் மிக் விமானங்கள் எங்கே? ராடார்களுக்கு என்ன நடந்தது? விமான நிலையங்களுக்கு மேலாக ஒரு பறவையைக் கூட பறக்க விடமாட்டோம் என்று மார்த்தட்டியவர்களின் கூற்றுக்கு என்ன நடந்தது? இவற்றிற்கெல்லாம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் விமானப்ப டைத் தளபதியுமே பொறுப்பு கூற வேண்டும். இவர்களால் ஊடகங்களையும் மக்களையும் தொடர்ந்தும் ஏமாற்றிக் கொண்டே இருக்க முடியாது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ :-இத்தாக்குதல்களைக் காரணங்காட்டி ப டையினரால் வன்னிப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் படையெடுப்பு நடவடிக்கைகள் கைவிடப்படவும் மாட்டாது. மிக் - 27 ரக விமானக் கொள்வனவு தொடர்பாக என்மீது நேரடியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. ஆனால் இவ்வாறான குற்றச்சாட்டுக்க ளைச் சுமத்தும் எதிர்க்கட்சியினரின் ஆட்சிக் காலத்திலேயே புலிகளால் பல்வேறுபட்ட ஆயுதங்கள் கொள்வனவும் செய்யப்பட்டன. பலமும் அப்போது தான் அதிகமாக இருந்தது. இது பற்றி எதிர்க்கட்சியினர் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். ஜே.வி.பி. தலைவர் விமல் வீரவன்ச :-அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீதான தாக்குதலைக் காரணங் காட்டி மீண்டும் புலிகளுடனான பேச்சுக்களை ஆரம்பிக் குமாறு புலிகளுடன் நட்பு பாராட்டும் ச க்திகள் அரசை வற்புறுத்தக்கூடும். ஆ னால் அரசு அதற்கு இணங்கக் கூடாது. விரயமானதும் ஆபத்தானதுமான நடவ டிக்கைகளில் இருந்து விலகி பாதுகாப்புப் படைகளில் தியாகத்துக்கு நிகரான தியாகம் ஒன்றை பெற்றுக் கொடுக்க அரசு முன்வர வேண்டும். பிரான்ஸ் பயங்கரவாத ஒழிப்பு சட்டத்தரணி தலைவர் ஜான் லூவிஸ் :-விடுதலைப் புலிகள் அமைப்பை முழு மையாக இல்லாதொழிக்க முனைவது என்பது இலங்கைக்கு எவ்வகையிலும் சாத்தியமற்றதொன்றாகும். விமானப்படை முதலான சகல படைகளி ன் பலத்தையும் விடுதலைப் புலிகள்இயக்கம் கொண்டுள்ளது. விடுதலைப் புலிகளின் அமைப்பு தீவிரவாதத்தை முத ன்மையாகக் கொண்டு அமைந்த அ மைப்பாகும். ஆதனால் அவர்களை தோ ற்கடிப்பதென்பது சற்று சிரமமான விடயமே ஆகும் என்று தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரதும் கருத்துக்கள் இவ்வாறிருக்க அரச படைத்தரப்பினர் இத்தாக்குதலின் பின்னர் தாக்குதலிலும் கொடுமையான செயற்பாடு ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். அதாவது தாக்குதலின் போது பலியான புலி உறுப்பினர்களின் சடலங்களை படையினர் நிர்வாணமாக மக்களின் பார்வைபடும் வகையில் கொண்டுசென்றுள்ளனர்.மூர்க்கத்தனமான தாக்குதல்களை நடத்தியவர்கள் என்றாலும் அவர்களின் சடலங்களுக்கு உரிய மரியாதையை செலுத்தியிருக்க வேண்டும்.
இதே சமயம் அநுராதபுரம் விமானப் படைத்தளத்தின் மீதான புலிகளின் தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பு இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் 21 புலி உறுப்பினர்களும் எவ்வாறு புகுந்தார்கள்? என்ற கேள்வியுடன் இரகசிய பொலிஸார் இவ்விசாரணை நடத்தி வருகின்றனர். விமானப்படைத்தளத்திற்கு நுழைவதற்கு பாதுகாப்பு பிரிவினர் புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக இரகசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டினரால் மட்டுமன்றி வெளிநாட்டினரதும் பேச்சுக்கு காரணமாகியுள்ள இத்தாக்குதல் அரசியலில் பாரிய சூறாவளியை ஏற்படுத்த வழிசமைத்துள்ளது. அரசில் உள்ள ஒருசிலர் புலிகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தையை நடத்தி இப்பிரச்சினைக்கு முடிவு காணுமாறும் இன்னும் சிலர்; யுத்தத்தால் அவர்களை தோற்கடிப்பது தவிர வேறு வழியில்லை என்றும் கூறிக்கொண்டிருக்கின்றனர்.
இலங்கையின் தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வு எதிர்வரும் நவம்பர் மாதம் வழங்கப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரம்புக்கணையில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போது குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் குறிப்பிட்ட நவம்பர் மாதம் பிறப்பதற்குள் புலிகளால் அநுராதபுரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலால் நவம்பர் தீர்வுக்கு என்ன நடக்கும் என்பதை இப்போதைக்கு கூற முடியாது.
அதேவேளை எதிர்வரும் நவம்பரில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் மாவீரர் தின உரையை நிகழ்த்தவிருக்கிறார். அவ்வுரை விடுதலைப் புலிகளை யுத்தத்தை நோக்கி இட்டுச் செல்லுமா அல்லது அவர்கள் சமாதானத் தீர்வை வெண்டி நிற்கிறார்களா என்பதை அறிந்து கொள்ள உலகமே காத்திருக்கிறது. மஹிந்தவின் யுத்தத்தின் மீதான ஆர்வமும் விடுதலைப் புலிகளின் அண்மைய தாக்குதல்களும் நிச்சயம் இலங்கைக்கு நல்லதொரு எதிர்காலம் இல்லை என்பதையே காட்டி நிற்கிறது.
Thursday, November 15, 2007
இலத்திரனியல் ஊடகங்களின் ஆரம்பமும் பரவலும்.
தகவல் தொடர்பு ஊடகங்கள் செய்திகளையும் தகவல்களையும் வழங்குவதில் பொதுமக்களுடன் பாரிய தொடர்பினைக் கொண்டிருக்கின்றன. உலகத்தை உள்ளங்கையில்தரும் பொறுப்பினை செவ்வனே செய்வதற்கு இலத்திரனியல் ஊடகங்களான வானொலி மற்றும் தொலைக்காட்சி என்பன முக்கிய பங்கினை வகிக்கின்றன.
கடந்த 25 வருட காலப்பகுதியில் இந்த வானொலி மற்றும் தொலைக்காட்சி என்பன பொது மக்களிடையே பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தி உள்ளன. அரச தனியார் இலத்திரனியல் ஊடகங்கள் என்று இரண்டு பட்டிருந்தாலும் அவை பொது விடயங்களையும் உரிய சூழ்நிலைகளில் பொது மக்களுக்கு தேவையான செய்திகளையும் வழங்கி வருகின்றன.வானொலி ஒலிபரப்புச் சேவை
நிகழ்கால வானொலி ஒலிபரப்புச்சேவையின் பரிமாணமானது பாரியளவிலான விஞ்ஞான தொழில்நுட்பத்தினை உள்ளடக்கிய புதியதொரு சமூக வளர்ச்சியாகவே காணப்படுகிறது. ஏனைய ஊடகங்களுடன் ஒப்பிடுமிடத்து வானொலிச் சேவையானது பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் மீறி வெற்றியடைந்ததொன்றாகும். இவ்வானொலிச் சேவையானது பிரதான 03 காரணங்களை உள்ளடக்கியே வளர்ச்சியடைந்துள்ளன. அவையானவை:-
(01) உலக வர்த்தகம் மற்றும் சர்வதேச நடவடிக்கைகள் வளர்ச்சியடைந்ததுடன் கடல்தாண்டிச் செல்லக்கூடிய ஊடகத்தின் தேவைப்பாடு முக்கியமாக இருந்தமை. (02) ஒவ்வொருவருக்கிடையே ஏற்பட்ட விஞ்ஞான தொழில்நுட்ப முன்னேற்றம். (03) வயர்லஸ் டெலிகிராப் மற்றும் தொலைபேசி சேவை தொழில்நுட்பம் வாய்ந்த ஊடகமாக வளர்ச்சியடைந்தமை.
மேற்படி காரணங்களை முதலாகக் கொண்டதன் பின்னரும் பல பிரச்சினைகளை எதிர்நோக்கிய பின்னருமே பிற்காலத்தில் வானொலி ஒலிபரப்புச்சேவை ஊடகம் கண்டுபிடிக்கப்பட்டது.
பொருளாதார மற்றும் அரசியல் தேவைகளுக்கு தகவல் பரிமாற்றம் மிக முக்கிய தேவையாக காணப்பட்டது. ஆரம்பத்தில் தகவல்களை பரிமாறிக்கொள்வதற்காக மக்கள் அத்தகவல்களை எடுத்துக்கொண்டு சென்றார்கள். இதில் பல பிரச்சினைகள் தோன்றவே மேற்படி தகவல் பரிமாற்றத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டி ஏற்பட்டது. இக்காலப்பகுதியி;ல் நெப்போலிய மன்னரால் (ளுநிஅphழசநகழச ஊழஅஅரniஉயவழைn) எனும் தகவல் பரிமாற்றமொன்று மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்தது. சுமார் ஒவ்வொரு 10 மைல்; தூரங்களிலும் 224 தகவல் மையங்களை அமைத்து அவற்றிலிருந்து தகவல்களை பரிமாற்றுவதே நெப்போலிய மன்னனின் தகவல் பரிமாற்று முறையாகக் காணப்பட்டது.
மேற்படி தகவல் மையங்களில் அமைக்கப்பட்டுள்ள உயர் தூண்களில் குறித்த சில மனிதர்கள் ஏறிநின்று ஏனைய தகவல் மையத் தூணின் மீது நிற்கும் மனிதர்களுக்கு தமது கைகளால் குறித்த சில எழுத்துக்களையும் சைகைகளையும் வரைந்து காட்டப்பட்டன. அந்த எழுத்துக்கள் குறிக்கும் தகவல்களை விளங்கிக் கொள்ளும் அவர்கள் அதனை மற்றைய தகவல் மையத் தூண் மீது நிற்கும் மனிதனுக்கு அவ்வாறே தெரிவிப்பர். இந்த முறையிலேயே தகவல் பரிமாற்றம் இடம்பெற்றது. இம்முறையே டெலிகிராப் (வுநடநபசயிh) ஊடகத்துக்கு அடிப்படையாக விளங்கியது.
சுமார் 1830 ஆண்டுகாலப்பகுதியிலேயே மேற்படி டெலிகிராப் (வுநடநபசயிh) முறை தொடர்பான அறிவு விஞ்ஞான தொழில்நுட்ப வள்ர்ச்சியில் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எப்.பீ.மோர்ஸ் (கு.டீ.ஆழசளந) என்பவர் நிவ்யோர்க்கிலுள்ள தமது கல்லூரியில் குறித்த சில செயற்;திட்டங்களை அமைத்து அங்கிருந்து சுமார் 10 மைல் தூரத்திற்கு இடைப்பட்ட பிரதேசங்களில் தகவல்களைப் பரிமாற்றும் முறையொன்றை கையாண்டார்.
இம் முறையானது 1844 மே மாதம் 24 ஆம் திகதி அரச அனுமதியுடன் முதற் தடவையாக வோஷிங்டன் மற்றும் பெல்டிமோர் ஆகிய இரு பிரதேசங்களுக்கிடையே பரிமாற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது. வர்த்தகம, இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பல அரச நடவடிக்கைகளுக்கு மோர்ஸின் இத்தகவல் பரிமாற்றுமுறை உபயோகிக்கப்பட்டது.
1866 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அட்லாண்டிக் கடற்பரப்பினூடாக கேபில்கள் பொருத்தப்பட்டு கடலுக்கூடாக மேற்படி தகவல்கள் அனுப்பப்பட்டன. 1876 ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் கிரகம்பெல் மூலம் வயர்களினூடாக மனித குரல்கள் அனுப்பப்பட்டன. அதன் பின்னரே வயர்லஸ் டெலிகிராப் தகவல் தொடர்பு நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
1888 ஆம் ஆண்டு ஹென்ரிஷ் ஹர்டிஸினால் அலைவரிசையும் அவற்றை உற்பத்தி செய்யும் முறைமையும் கண்டுபிடிக்கப்பட்டது. 1890 ஆம் ஆண்டு தொடக்கத்தில் குகுல் மோ மார்க்கோனியினால் மேற்படி அலைவரிசைகள் மூலம் எவ்வாறு ஒலியினை அனுப்புவது என்பது குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனைகளின் பின்னர் அதன் மூலம் தகவல்கள் பரிமாற்றப்பட்டன.
20ம் ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்திலேயே அலைவரிசைகள் மூலம் தகவல் பரிமாற்றும் முறை ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன் அது கடற்படை, விமானப்படை மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் இரகசிய தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டது. மேற்படி வயர்லஸ் டெலிகிராப் இயந்திர உபயோகத்தின் பின்னர் வானொலி (சுயனழை) டெலிகிராப் இயந்திரம் உருவாக்கப்பட்டது. ரெஜினால் பெஸ்ஸெனட் (சுநபiயெட குநளளநனெந) எனும் நபரால் வானொலி இயந்திரம் குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சைகைகளுக்குப் பதிலாக மனித குரல்களை அலைவரிசைகள் மூலம் பயணிக்க வைப்பதற்காக டிரான்ஸ் மீட்டர் (வுசயnஉந ஆநநவநச) ஒன்று உபயோகப்படுத்தப்பட்டது. இவருடைய இம்முயற்சியானது 1906 ஆம் ஆண்டு ப+ர்த்தியடைந்ததுடன் 1906 ஆம் ஆண்டு நத்தார்ப் பண்டிகை தினத்தன்று இரவு வெற்றியடைந்தது. அன்றைய தினம் அட்லாண்டிக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த கப்பலின் டெலிகராப் இயக்குனர்களுக்கு முதன் முறையாக அந்த டெலிகராப் இயந்திரங்களினூடாக மனித குரல்கள் ஒலிபரப்பப்பட்டன. அவ்வியக்குனர்களால் இதனை நம்பமுடியாதிருந்ததுடன் பெரும் வியப்பையும தந்தது. தமது வெற்றியை உறுதிப்படுத்திக்கொண்ட ரெஜினால் முதலாவதாக ஒரு பேச்சை மேற்கொண்டார். புpன்னர் பாடலொன்றைப் பாடிக்கொண்டே வயலின் இசைக்கருவியையும் மீட்டினார்.
மேற்படி கண்டுபிடிப்பை அடுத்து வானொலி இயந்திரமானது கடற்படை மற்றும் விமானப்படை நடவடிக்கைகளுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. முதலாம் உலக யுத்தத்தின் போது மேற்படி வானொலிச் சேவை இராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டது. அது வரையில் அது பொது ஊடகமாகத் தொழிற்படவில்லை. அமெரிக்காவின் மார்க்கோனி நிறுவனத்தைச் சேர்ந்த டேவிட் மற்றும் சானோக் ஆகிய இரு என்ஜினியர்கள் அட்லாண்டிக் கடற்பரப்பில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் குறித்த தகவல்களை நிவ்யோர்க்கிலுள்ள தமது நிலையத்தில் தொடர்ந்து 3 நாட்களாக மக்களுக்காக ஒலிபரப்பினார்கள். மேற்படி தகவல்களைப் பெற்றுக்கொள்ள மக்கள் காட்டிய ஆர்வத்தை அவதானித்த சானோக் தமது நிறுவனத்தைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவருக்கு கடிதமொன்றை எழுதினாh.; அக்கடிதத்தில் “வானொலி ஊடகமானது மக்களின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றாக மாறிவிட்டது அதனால்; வானொலி இயந்திரங்களை உற்பத்திச்செய்வதால் நாம் கூடிய இலாபம் பெற முடியும்” என குறிப்பிட்டிருந்தார்.
சானோக்கின் கருத்தை ஏற்றுக்கொள்ளாத நிறுவனம் அதனைப் புறக்கணித்தது. சில நாட்களின் பின்னர் அந்நிறுவனத்தின் முகாமையாராக பதவி ஏற்ற சானோக் முதலாவதாக தமது கருத்தை நடைமுறைப்படுத்த முயற்சித்தார். மார்;கோணியின் விஞ்ஞான தொழிநுட்பக் கண்டுபிடிப்பும் சானோக்கின் தேடலும் பொது ஊடகமொன்றை வடிவமைத்தது. இவ்வடிவத்திற்கு ரேடியோ மியூசிக் பொக்ஸ் (சுயனழை ஆரளiஉ டீழஒ) எனும் பெயரும் சானோக்கினால் வழங்கப்பட்டது. மேற்படி சானோக்கின் சுயனழை ஆரளiஉ டீழஒ வடிவமானது 1920 ஆம் ஆண்டு பிராங்க் ஹொட்ராடினால் மேலும் சோதனைக்குட்படுத்தப்பட்டது. அவருடைய பரிசோதனைகளை அடுத்து வானொலி ஓலிபரப்பு நிலையமொன்றை உருவாக்கிய பிராங்க், வாரத்தில் 2 நாட்கள் இருமணி நேரமாக பாடல்களை ஓலிபரப்புச் செய்ததுடன் உலக மக்களுக்கு தேவையான பல தகவல்களையும் ஓலிபரப்புச் செய்தார்.
பிராங்கின் இவ்விருமணிநேரப் பாடல் ஒலிபரப்பில் மூழ்கிப்போன மக்கள் தொலைபேசி மூலமும் கடிதங்கள் மூலமும் தமக்குப் பிடித்த பாடல்களை ஒலிபரப்புமாறு வேண்டுகோள் விடுத்தாhகள்;.
மேற்படி ஒலிபரப்புச் சேவையின் கேள்வி அதிகரித்ததுடன் வானொலி இயந்திரங்களின் வி;ற்பனையும் அதிகரிக்கத் தொடங்கியது. 1920 ஆம் ஆண்டு முனுமுயு எனும் வானொலி ஒலிபரப்புச் சேவைமூலம் வானொலி இயந்திரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்போவதாக அறிவி;க்கப்பட்டது. அப்போது அமெரிக்காவின் ஜனாபதித் தேர்தல் முடிவுகள் வானொலியின் மூலம் ஒலிபரப்புச் செய்யப்பட்டன. மேற்படி தேர்தல் முடிவுகளை சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கேட்டு மகிழ்ந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படித் தேர்தல் முடிவுகள் ஒலிபரப்பப்பட்டதுடன் வானொலி இயந்திரங்களின் விற்பனையும் அதிகரித்தது. அமெரிக்காவில் வானொலி இயந்திரத்திற்கான கேள்வி அதிகரித்ததையிட்டு 1921 ஆம் ஆண்டு வானொலி உற்பத்தி;க்கான அனுமதி 32 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இது 1922 இல் 254 ஆக அதிகரித்தது.
1923 ஆம் ஆண்டில் 500 நிலையான ஒலிபரப்புச் சேவை நிலையங்களும் 1400 சிறு ஒலிபரப்புச் சேவை நிலையங்களும் அமெரிக்காவில் அமைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு தமது தனிப்பட்ட ஆட்சியை நடத்திவந்த வானொலி ஒலிபரப்புச் சேவை 1940 இன் பின்னர் தொலைக்காட்சியின் வருகை காரணமாக வீழ்ச்சியை நோக்கி நகரத் தொடங்கியது. ஆயினும் தளர்ந்து விடாத வானொலி நிலையங்கள் தமது சேவையைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தன.இலங்கையில் வானொலிச் சேவையின்ஆரம்பமும் ஒலிபரப்பும் 1921 ஆம் ஆண்டு முதன்முறையாக அமெரிக்காவின் பிட்டர்க் நகரில் ஆரம்பிக்கப்பட்ட வானொலி ஒலிபரப்புச் சேவைகள், தொடர்ந்து வந்த நான்கு ஆண்டுகாலப்பகுதியில் இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, ஜப்பான் போன்ற நாடுகளிலும் ஆரம்பிக்கப்பட்டன.
1923 டீடீஊ நிறுவனமானது வானொலிபரப்புச் சேவையின் வளர்ச்சிக்காக சுயாதீன நிறுவனமாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்தியாவில் 1923 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மும்பாய் வானொலி ஒலிபரப்புநிலையம் அமைக்கப்பட்டு மார்க்கோணி நிறுவனத்தினால் கடன்வாங்கப்பட்ட நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டன. இதனுடனேயே ஜப்பானிலும் வானொலி ஒலிபரப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன.
பிரித்தானியா, இந்தியா, மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் வானொலிச் சேவையின் வளர்ச்சி அதிகரிக்கும் போது இலங்கைக்கும் அதன் தேவை அத்தியாவசியமாக விளங்கியது. மேற்படி வானொலி ஒலிபரப்புச் சேவையின் தேவையை உணர்ந்து பிரித்தானியக் குடியரசினால் 1921 ஆம் ஆண்டு இலங்கையிலும் வானொலி ஒலிபரப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன.
டெலிகிராப் இயந்திரம் குறித்த பிரதான என்ஜினியராக இலங்கைக்கு வருகை தந்த “எட்மன்ட் ஹாபன்” இது குறித்த ஆலோசனைகளை வழங்கினார். அச்சமயம் இலங்கையில் அமைக்கப்பட்டிருந்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டார்.
அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் கூட்டங்களை நடத்திய எட்மன்ட் தமது முயற்சியாலும் அனைவரது ஒத்துழைப்பாலும் 1924 ஜூன் 27 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு உத்தியோகப+ர்வமானமுறையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைத் திறந்து வைத்தார். செய்திகள், இசைநிகழ்ச்சிகள், அரச அறிவித்தல்கள், அரச அதிகாரிகளின் உரையாடல்கள் என்பன வானொலியில் ஒலிபரப்பப்பட்டதுடன் 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி கலையகம் ஒன்றை அமைத்து வானொலி ஒலிபரப்புச் சேவையில் வளர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது 160 ஊழியர்களைக் கொண்டிருந்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வாரத்தில் இரு நாட்கள் மட்டுமே ஒலிபரப்புக்களை மேற்கொண்டது.
1930 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேலும் பல வளர்ச்சிகளைக் கண்;ட இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பல்வேறுபட்ட தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டிருந்தது. இக்காலப்பகுதியில் டீடீஊ நிறுவனமும் அதன் என்ஜினியர்களும் இந்தியாவில் பல புதிய வானொலிச் செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தனர். அச்சமயம் இலங்கையிலும் அச்செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1940 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சர்வதேச சேவைகள் மற்றும் வர்த்தக சேவைகள் தொடர்பான தகவல்கள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளிலும் ஒலிபரப்பப்பட்டன. அத்துடன் பௌத்தசமயம் ,இந்துசமயம், கிறிஸ்தவம் மற்றும் முஸ்லீம்களுக்குச் சிறப்பான தினங்களில் அம்மதத்திற்குரிய நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பப்பட்டன.
இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் வானொலி ஒலிபரப்புச் சேவையை முறையாகக் கொண்டு நடாத்துவதற்காக அரச ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டதுடன் அதில் வானொலி ஒலிபரப்பு நிலையத்தின் நிர்வாகம், கலைஞர்களைத் திருப்திப்படுத்தல், மற்றும் நிகழ்ச்சிநிரல்களும் அவை ஒலிபரப்பப்படும் நேரங்களும் தீர்மானிக்கப்பட்டதுடன் தேசிய ஊடகமாக வானொலியினைப் பிரகடனப்படுத்துதல் குறித்தும் அவ்வாணைக் குழுக்கூட்டங்களில் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டது.
1960 ஆம் ஆண்டுகாலப் பகுதியின் பின்னர் அரச தலைவர்களின் உரைகள், அரச நிகழ்ச்சிகள், சமயநிகழ்ச்சிகளுக்காக வானொலி உபயோகப்படுத்தப்பட்டதுடன் 1965 ஆம் ஆண்டு இலங்கை வானொலி ஒலிபரப்புச் சேவையானது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அதன்பின்னரும் அரசியல் நிகழ்வுகள், கூட்டங்கள், அரசியல் உரைகள் என்பனவும் ஒலிபரப்பப்பட்டன. 1976 ஆம் ஆண்டிற்குப் பின்னரும் இந்;நிலை தொடர்ந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1994 ஆம் ஆண்டு சிரச (ளசையளய) எனும் பெயருடைய தனியார் வானொலி ஒலிபரப்புச் சேவையொன்று கு.ஆ எனும் அலைவரிசையினூடாக ஆரம்பிக்கப்பட்டதுடன் அதில் நவீன தொழிநுட்பமுறையினை உபயோகித்தல், நேரடி ஒலிபரப்புக்கள் மேற்கொள்ளப்படல், தொலைபேசி மூலம் நேயர்கள் தொடர்பு கொண்டு உரையாற்றக்கூடிய வசதிகளை அமைத்துக் கொடுத்;தல் போன்றவற்றை உள்ளடக்கியிருந்தனர்.
தொலைக்காட்சியின் வருகை காரணமாக வானொலியுடன் தொடரப்பட்டிருந்த நேயர்கள் மீண்டும் அதனைச் சுற்றி வட்டமிடக்கூடிய வகையில் இவ்வானொலி அலைவரிசை செயற்பட்டது. இது தவிர மேலும் பல வானொலி அலைவரிசைகள் உருவாக்கப்பட்டன. அவையாவன:- ஹிரு (ர்சைர) கு.ஆ, தரு (வுhயசர) கு.ஆ, ஸ்ரீ (ளுசi) கு.ஆ. லக்ஹண்ட (டரஉம hயனெய) , சூரியன் (ளுழழசயைn) கு.ஆஇ சக்தி (ளூயமவாi) கு.ஆஇ மற்றும் இசிர (ஐளசைய) கு.ஆஇ என்பன அவற்றுள் முதலிடங்களைப் பெற்றனவாகக் காணப்பட்டன.
இன்றைய நாள்வரை மேற்குறிப்பிட்ட வானொலி ஒலிபரப்புச் சேவைகளைத்; தவிர மேலும் பல வானொலி ஒலிபரப்புச் சேவைகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் மக்களைக் கவர்ந்திழுக்கக்கூடிய தொழிநுட்பம் மிக்க நிகழ்ச்pசகள் இடம்பெறுகின்றன. புதிய தொழிநுட்ப வசதி முறைகளின் கண்டுபிடிப்புக்கள் காரணமாக மென்மேலும் பல வானொலி ஒலிபரப்புச் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு வருவதுடன் அவை மக்கள் மத்தியி;ல் பிரபல்யமடையவும் காரணமாக அமைகின்றன.
தொலைக்காட்சி ஒளிபரப்புச் சேவை
வானொலி ஒலிபரப்புச் சேவையைப் போன்றே தொலைக்காட்சியின் அறிமுகத்திற்கும் நீண்டகால பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பரிசோதைனைகளின் பிரதிபலனாகவே தொலைக்காட்சி எனும் மக்கள் ஊடகம் வெளிப்பட்டது.
தொலைக்காட்சி ஊடகமானது ஸ்கேனிங் எனும் தொழிநுட்கத்தின் வாயிலாகவே உருவாக்கப்பட்டது. இந்த ஸ்கேனிங் தொழிநுட்பமானது வீடியோ கமராக்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
1884 ஆம் ஆண்டு போல் நிப்கோல் என்பவராலேயே இந்த ஸ்கேனிங் தொழிநுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இவரின் கண்டுபிடிப்பு குறித்து பரிசோதனைகளை நடத்திய பிரித்தானிய நாட்டு என்ஜினியரான ஜோன் லொகி பெயார் அதனை மேலும் விரிவான முறையில் பரிசோதனைகளுக்குள்ளாக்கி அதில் 8 ஸ்கேனிங் தொழிநுட்ப இரேகைகளைப் பயன்படுத்தியதுடன் 50 உருவப்படங்களையும் உள்ளடக்கினார். தாம் உள்ளடக்கிய உருவப்படங்களை ஒரு திரையில் பிரதிபலிக்கச் செய்த அவர் அத்திரையில் உருவப்படங்களை விட நிழல்களையே அதிகளவில் கண்டார்.
1929 ஆம் ஆண்டுகாலப் பகுதியில் டீடீஊ நிறுவனம் தமது பரிசோதனைகளுடன் கூடிய ஒளிபரப்பை மேற்கொண்டது. அப்போது ஸ்கேனிங் இரேகைகளின் எண்ணிக்கை 8 இலிருந்து 30 ஆக முன்னேற்றமடைந்திருந்தது. ஆயினும் உருவப்படங்கள் தெளிவற்றும் அசைவுத்தன்மை உடையனவாகவும காணப்பட்டன. முன்னரை விட ஓரளவு தெளிவான படங்கள் காணப்பட்ட போதிலும் ஒரு செக்கனுக்கு ஒளிபரப்பப்படும் படங்களின் எண்ணிக்கை 12 ஆக காணப்பட்டதால் அவை அசைவுத் தன்மையைக் கொண்டிருந்தன.
இமி ( ஐஅi ) நிறுவனம் மற்றும் மார்க்கோணி வயர்லஸ் டெலிகிராப் ( ஆயசமழni ஏசைடநளள வுநடநபசயிh ) நிறுவனம் ஆகிய இரண்டும் இணைந்து தொலைக்காட்சியை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததுடன் ஸ்கேனிங் தொழிநுட்ப இரேகைகளின் எண்ணிக்கையை 205 ஆகவும் ஒரு செக்கனுக்கு ஒளிபரப்பப்படும் படங்களின் எண்ணிக்கையை 25 ஆகவும் இதிகரிக்கச் செய்தன.
இவர்களின் பரிசோதனைகளை அடுத்து ஜோன் லொகீ பெயார் 240 ஸ்கேனிங் தொழிநுட்ப இரேகைகளையும் ஒரு செக்கனுக்கு 25 படங்களையும் ஒளிபரப்பினார்.
டீடீஊ நிறுவனமானது மேற்படி இரு முறைகளையும் உபயோகப்படுத்திக் கொண்டதுடன் ஜோன் லொகீ பெயாரின் கண்டுபிடிப்பு முறையை 1937 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை உபயோகப்படுத்தியதாக தெரியவந்துள்ளது. அந்த வகையில் தொலைக்காட்சி ஒளிபரப்பின் தந்தையாக ஜோன் லொகீ பெயாரே முன்மொழியப்பட்டார். ஆயினும் தொலைக்காட்சி ஒளிபரப்பானது தனிநபர் ஒருவரினால் ஒளிபரப்பப்பட முடியாததொன்றாகும்.
1928 ஆம் ஆண்டுகாலப் பகுதிகளிலேயே ஜோன் லொகீ பெயாரினால் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது. 1939 ஆம் ஆண்டுக் காலப்பகுதிகளில் அமெரிக்காவில் தொலைக்காட்சி உபயோகப்படுத்தப்பட்டதுடன் அதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்ட் வெல்ட் மக்களுக்கான உரைகளையும் நிகழ்த்தினார். ஆயினும் மக்கள் மத்தியில் அதுவரையில் இத் தொலைக்காட்சி இயந்திரம் பிரபல்யமடைந்திருக்கவில்லை.
அன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சி தொடர்பான அறிவு மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டிருக்காமையும் தொலைக்காட்சி உற்பத்தியில் வளர்ச்சி ஏற்பட்டிருக்காமையும் அது பிரபல்யமடைந்திருக்காமைக்கு காரணங்களாக விளங்கின.
1941 ஆம் ஆண்டு அமெரிக்காவின் குஊஊ நிறுவனத்திற்கு தொலைக்காட்சிகளை உற்பத்தி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. 2 ஆம் உலகப்போரின் பின்னர் ஏற்பட்ட பொருளாதார அபிவிருத்தியுடன் தொலைக்காட்சி உற்பத்தியும் வளர்ச்சியடைந்தது.
1948 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமெரிக்காவில் 70 தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்ததுடன் சுமார் 10 இலட்சம் தொலைக்காட்சி இயந்திரங்கள் உபயோகத்தில் இருந்துள்ளன. 1975 ஆம் ஆண்டின் பின்னர் ஜப்பான் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட தொலைக்காட்சிகள் சந்தைக்குள் பிரவேசித்ததும் தொலைக்காட்சிகளின் விலைகளும் குறைவடைந்து அவற்றின் உற்பத்திகளும் அதிகரித்தன.இலங்கையில் தொலைக்காட்சியின்அறிமுகமும் ஒளிபரப்பும்
1979 ஆம் ஆண்டு இலங்கையில் தொலைக்காட்சியை அறிமுகப்படுத்துவதற்காக இலங்கை அரசு ஜப்பான் அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தியது. இப்பேச்சுவார்த்தை இடம்பெற்ற காலகட்டத்தில் இலங்கையில் “சுயாதீனதொலைக்காட்சிசேவை” எனும் தனியார் ஒளிபரப்புச் சேவையொன்று ஷான் விக்கிரமசிங்க எனும் நபரால் பன்னிப்பட்டிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இத் தொலைக்காட்ச்p சேவையானது குறித்த சில பிரதேசங்களில் மட்டுமே வரையறுக்கப்பட்ட ஒளிபரப்பை மேற்கொண்டதுடன் அது ஆரம்பிக்கப்பட்டு 2 மாதகாலம் முடிவடைந்ததும் அந் நிறுவனத்தின் நிர்வாகம் தொடர்பாக அரசுடன் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக அந்நிறுவனம் அரச கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. தற்காலத்தில் ஐ.டி.என் (ஐவுN) எனும் பெயரில் இயங்கும் தொலைக்காட்சி ஒளிபரப்புச் சேவையே அதுவாகும்.
மேற்படி தொலைக்காட்சி ஒளிபரப்புச் சேவைக்கு இணையான தொலைக்காட்சி சேவையொன்றை ஆரம்பிக்க எண்ணிய இலங்கை அரசாங்கம் இலங்கை வானொலி ஒலிபரப்பு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தியது.
மேற்படி பேச்சுவார்த்தையின் பின்னர் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு அவசியமான ஊடகவியலாளர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக நாரஹேன்பிட்டியில் பயிற்சி நிலையமொன்றையும் அமைத்தனர்.
1982 பெப்ரவரி 15 ஆம் திகதி ஜப்பான் அரசுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பிரதிபலனாக இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் முதலாவது ஒளிபரப்பாக பிரித்தானிய மகாராணியார் இலங்கைக்கு வந்த சம்பவத்தை ஒளிபரப்புச் செய்தனர்.
இதன் முதலாவது தலைவராக எம்.ஜே. பெரேரா தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் இதற்கான கலையகம் ஒன்று 1989 ஜுன் 2 ஆம் திகதி 20 இலட்சம் ரூபா பெறுமதியான சாதனங்களுடன் அமைக்கப்பட்டதுடன் இதில் ஒரே நேரத்தில் 12 பேர் செயற்படக்கூடியதாக அமைந்திருந்தது.
1992 ஏப்ரலில் எம்.டீவி, என்ற தனியார் நிறுவனம் தொலைக்காட்சி ஓளிபரப்புக்களை ஆரம்பித்தது. 1995ன் பிற்பகுதியில் அதன் ஒளிபரப்புக்களை விஸ்தரித்ததுடன் பின் சிரச டீவி, சக்தி டீவி, என்பனவற்றையும் ஆரம்பித்தது. சக்தி டீவி தனக்கென ஒரு பாதையை வகுத்து நிகழ்ச்சிளை வழங்கி வருகின்றது. வட-கிழக்கு உட்பட நாட்டின் எல்லாப் பக்கங்களுக்கும் தனது சேவையை மேற்கொண்டு வருகிறது. யாழ்க்குடாநாட்டில் ஒளிபரப்பாகும் ஒரே ஒரு தனியார் தொலைக்காட்சி இது மட்டும்தான். இனங்களினது பண்பாட்டுப் புரிதலினாலும் நம்பிக்கையை பேணுவதினாலும் இலங்கையில் மட்டுமல்லாது சர்வசே ரீதியிலும் பிரபல்யம் அடைந்;துள்ளது.
1993 ஜூலை 21ம் திகதி டீ.என்.எல். என்ற பெயரில் இன்னுமொரு தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது. 1993ம் ஆண்டு பீ.பீ.சி. யும் ஸ்டார் ஸ்போட்ஸ் ( ளுவயச ளுpழவள )உம் சேர்ந்து ஈ.டீ.வி.( நு.வுஎ ) என்ற பெயரில் ஒரு ஒளிபரப்பு ஆரம்பிக்கப்பட்டது.
ஈ.ஏ.பீ. எதிரிசிங்க கூட்டு வியாபார நிறுவனம் 1996 மார்ச் 26ம் திகதி ஈ.டீ.வி. சேவையை விலைக்கு வாங்கியது. அதிலே வெளிநாட்டுச் செய்திகளையும், மேலைத்தேயத் திரைப்படங்பளையும் ஒளிபரப்பியது. இதன் பின்னர் 1997 மார்ச் 16ம் திகதி; சுவர்ணவாஹினி என்ற பெயரில் சிங்கள மொழி மூல தொலைக்காட்சி சேவையை ஆரம்பித்து இன்றுவரை ஒளிபரப்பி வருகின்றது.
இப்பொழுதுள்ள பொருளாதார நிலைமையில்; இலத்திரனியல் ஊடகங்கள் பாரிய போட்டிகளுக்கு முகம் கொடுத்து முன்னேறிச்சேல்ல வேண்டிய கடப்பாடு காணப்படுகிறது. இலத்திரனியல் ஊடகங்களின் வர்த்தக நோக்கங்களுக்காகவும், வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்காகவும் கூடுதலாக இளைஞர்களைக் குறித்தே நிகழ்ச்சிகள் ஒலி, ஒளிபரப்பப்படுகின்றன.
உலகம் மாறிவரும் இந்தக் காலகட்டத்தில் இலத்திரனியல் ஊடகங்களின் தேவையும், கேள்வியும் அதிகரிதிதுள்ள நிலையில் ஊடகங்கள் பொது மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் வகையில் செயற்பட வேண்டும்.
கடந்த 25 வருட காலப்பகுதியில் இந்த வானொலி மற்றும் தொலைக்காட்சி என்பன பொது மக்களிடையே பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தி உள்ளன. அரச தனியார் இலத்திரனியல் ஊடகங்கள் என்று இரண்டு பட்டிருந்தாலும் அவை பொது விடயங்களையும் உரிய சூழ்நிலைகளில் பொது மக்களுக்கு தேவையான செய்திகளையும் வழங்கி வருகின்றன.வானொலி ஒலிபரப்புச் சேவை
நிகழ்கால வானொலி ஒலிபரப்புச்சேவையின் பரிமாணமானது பாரியளவிலான விஞ்ஞான தொழில்நுட்பத்தினை உள்ளடக்கிய புதியதொரு சமூக வளர்ச்சியாகவே காணப்படுகிறது. ஏனைய ஊடகங்களுடன் ஒப்பிடுமிடத்து வானொலிச் சேவையானது பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் மீறி வெற்றியடைந்ததொன்றாகும். இவ்வானொலிச் சேவையானது பிரதான 03 காரணங்களை உள்ளடக்கியே வளர்ச்சியடைந்துள்ளன. அவையானவை:-
(01) உலக வர்த்தகம் மற்றும் சர்வதேச நடவடிக்கைகள் வளர்ச்சியடைந்ததுடன் கடல்தாண்டிச் செல்லக்கூடிய ஊடகத்தின் தேவைப்பாடு முக்கியமாக இருந்தமை. (02) ஒவ்வொருவருக்கிடையே ஏற்பட்ட விஞ்ஞான தொழில்நுட்ப முன்னேற்றம். (03) வயர்லஸ் டெலிகிராப் மற்றும் தொலைபேசி சேவை தொழில்நுட்பம் வாய்ந்த ஊடகமாக வளர்ச்சியடைந்தமை.
மேற்படி காரணங்களை முதலாகக் கொண்டதன் பின்னரும் பல பிரச்சினைகளை எதிர்நோக்கிய பின்னருமே பிற்காலத்தில் வானொலி ஒலிபரப்புச்சேவை ஊடகம் கண்டுபிடிக்கப்பட்டது.
பொருளாதார மற்றும் அரசியல் தேவைகளுக்கு தகவல் பரிமாற்றம் மிக முக்கிய தேவையாக காணப்பட்டது. ஆரம்பத்தில் தகவல்களை பரிமாறிக்கொள்வதற்காக மக்கள் அத்தகவல்களை எடுத்துக்கொண்டு சென்றார்கள். இதில் பல பிரச்சினைகள் தோன்றவே மேற்படி தகவல் பரிமாற்றத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டி ஏற்பட்டது. இக்காலப்பகுதியி;ல் நெப்போலிய மன்னரால் (ளுநிஅphழசநகழச ஊழஅஅரniஉயவழைn) எனும் தகவல் பரிமாற்றமொன்று மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்தது. சுமார் ஒவ்வொரு 10 மைல்; தூரங்களிலும் 224 தகவல் மையங்களை அமைத்து அவற்றிலிருந்து தகவல்களை பரிமாற்றுவதே நெப்போலிய மன்னனின் தகவல் பரிமாற்று முறையாகக் காணப்பட்டது.
மேற்படி தகவல் மையங்களில் அமைக்கப்பட்டுள்ள உயர் தூண்களில் குறித்த சில மனிதர்கள் ஏறிநின்று ஏனைய தகவல் மையத் தூணின் மீது நிற்கும் மனிதர்களுக்கு தமது கைகளால் குறித்த சில எழுத்துக்களையும் சைகைகளையும் வரைந்து காட்டப்பட்டன. அந்த எழுத்துக்கள் குறிக்கும் தகவல்களை விளங்கிக் கொள்ளும் அவர்கள் அதனை மற்றைய தகவல் மையத் தூண் மீது நிற்கும் மனிதனுக்கு அவ்வாறே தெரிவிப்பர். இந்த முறையிலேயே தகவல் பரிமாற்றம் இடம்பெற்றது. இம்முறையே டெலிகிராப் (வுநடநபசயிh) ஊடகத்துக்கு அடிப்படையாக விளங்கியது.
சுமார் 1830 ஆண்டுகாலப்பகுதியிலேயே மேற்படி டெலிகிராப் (வுநடநபசயிh) முறை தொடர்பான அறிவு விஞ்ஞான தொழில்நுட்ப வள்ர்ச்சியில் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எப்.பீ.மோர்ஸ் (கு.டீ.ஆழசளந) என்பவர் நிவ்யோர்க்கிலுள்ள தமது கல்லூரியில் குறித்த சில செயற்;திட்டங்களை அமைத்து அங்கிருந்து சுமார் 10 மைல் தூரத்திற்கு இடைப்பட்ட பிரதேசங்களில் தகவல்களைப் பரிமாற்றும் முறையொன்றை கையாண்டார்.
இம் முறையானது 1844 மே மாதம் 24 ஆம் திகதி அரச அனுமதியுடன் முதற் தடவையாக வோஷிங்டன் மற்றும் பெல்டிமோர் ஆகிய இரு பிரதேசங்களுக்கிடையே பரிமாற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது. வர்த்தகம, இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பல அரச நடவடிக்கைகளுக்கு மோர்ஸின் இத்தகவல் பரிமாற்றுமுறை உபயோகிக்கப்பட்டது.
1866 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அட்லாண்டிக் கடற்பரப்பினூடாக கேபில்கள் பொருத்தப்பட்டு கடலுக்கூடாக மேற்படி தகவல்கள் அனுப்பப்பட்டன. 1876 ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் கிரகம்பெல் மூலம் வயர்களினூடாக மனித குரல்கள் அனுப்பப்பட்டன. அதன் பின்னரே வயர்லஸ் டெலிகிராப் தகவல் தொடர்பு நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
1888 ஆம் ஆண்டு ஹென்ரிஷ் ஹர்டிஸினால் அலைவரிசையும் அவற்றை உற்பத்தி செய்யும் முறைமையும் கண்டுபிடிக்கப்பட்டது. 1890 ஆம் ஆண்டு தொடக்கத்தில் குகுல் மோ மார்க்கோனியினால் மேற்படி அலைவரிசைகள் மூலம் எவ்வாறு ஒலியினை அனுப்புவது என்பது குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனைகளின் பின்னர் அதன் மூலம் தகவல்கள் பரிமாற்றப்பட்டன.
20ம் ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்திலேயே அலைவரிசைகள் மூலம் தகவல் பரிமாற்றும் முறை ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன் அது கடற்படை, விமானப்படை மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் இரகசிய தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டது. மேற்படி வயர்லஸ் டெலிகிராப் இயந்திர உபயோகத்தின் பின்னர் வானொலி (சுயனழை) டெலிகிராப் இயந்திரம் உருவாக்கப்பட்டது. ரெஜினால் பெஸ்ஸெனட் (சுநபiயெட குநளளநனெந) எனும் நபரால் வானொலி இயந்திரம் குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சைகைகளுக்குப் பதிலாக மனித குரல்களை அலைவரிசைகள் மூலம் பயணிக்க வைப்பதற்காக டிரான்ஸ் மீட்டர் (வுசயnஉந ஆநநவநச) ஒன்று உபயோகப்படுத்தப்பட்டது. இவருடைய இம்முயற்சியானது 1906 ஆம் ஆண்டு ப+ர்த்தியடைந்ததுடன் 1906 ஆம் ஆண்டு நத்தார்ப் பண்டிகை தினத்தன்று இரவு வெற்றியடைந்தது. அன்றைய தினம் அட்லாண்டிக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த கப்பலின் டெலிகராப் இயக்குனர்களுக்கு முதன் முறையாக அந்த டெலிகராப் இயந்திரங்களினூடாக மனித குரல்கள் ஒலிபரப்பப்பட்டன. அவ்வியக்குனர்களால் இதனை நம்பமுடியாதிருந்ததுடன் பெரும் வியப்பையும தந்தது. தமது வெற்றியை உறுதிப்படுத்திக்கொண்ட ரெஜினால் முதலாவதாக ஒரு பேச்சை மேற்கொண்டார். புpன்னர் பாடலொன்றைப் பாடிக்கொண்டே வயலின் இசைக்கருவியையும் மீட்டினார்.
மேற்படி கண்டுபிடிப்பை அடுத்து வானொலி இயந்திரமானது கடற்படை மற்றும் விமானப்படை நடவடிக்கைகளுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. முதலாம் உலக யுத்தத்தின் போது மேற்படி வானொலிச் சேவை இராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டது. அது வரையில் அது பொது ஊடகமாகத் தொழிற்படவில்லை. அமெரிக்காவின் மார்க்கோனி நிறுவனத்தைச் சேர்ந்த டேவிட் மற்றும் சானோக் ஆகிய இரு என்ஜினியர்கள் அட்லாண்டிக் கடற்பரப்பில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் குறித்த தகவல்களை நிவ்யோர்க்கிலுள்ள தமது நிலையத்தில் தொடர்ந்து 3 நாட்களாக மக்களுக்காக ஒலிபரப்பினார்கள். மேற்படி தகவல்களைப் பெற்றுக்கொள்ள மக்கள் காட்டிய ஆர்வத்தை அவதானித்த சானோக் தமது நிறுவனத்தைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவருக்கு கடிதமொன்றை எழுதினாh.; அக்கடிதத்தில் “வானொலி ஊடகமானது மக்களின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றாக மாறிவிட்டது அதனால்; வானொலி இயந்திரங்களை உற்பத்திச்செய்வதால் நாம் கூடிய இலாபம் பெற முடியும்” என குறிப்பிட்டிருந்தார்.
சானோக்கின் கருத்தை ஏற்றுக்கொள்ளாத நிறுவனம் அதனைப் புறக்கணித்தது. சில நாட்களின் பின்னர் அந்நிறுவனத்தின் முகாமையாராக பதவி ஏற்ற சானோக் முதலாவதாக தமது கருத்தை நடைமுறைப்படுத்த முயற்சித்தார். மார்;கோணியின் விஞ்ஞான தொழிநுட்பக் கண்டுபிடிப்பும் சானோக்கின் தேடலும் பொது ஊடகமொன்றை வடிவமைத்தது. இவ்வடிவத்திற்கு ரேடியோ மியூசிக் பொக்ஸ் (சுயனழை ஆரளiஉ டீழஒ) எனும் பெயரும் சானோக்கினால் வழங்கப்பட்டது. மேற்படி சானோக்கின் சுயனழை ஆரளiஉ டீழஒ வடிவமானது 1920 ஆம் ஆண்டு பிராங்க் ஹொட்ராடினால் மேலும் சோதனைக்குட்படுத்தப்பட்டது. அவருடைய பரிசோதனைகளை அடுத்து வானொலி ஓலிபரப்பு நிலையமொன்றை உருவாக்கிய பிராங்க், வாரத்தில் 2 நாட்கள் இருமணி நேரமாக பாடல்களை ஓலிபரப்புச் செய்ததுடன் உலக மக்களுக்கு தேவையான பல தகவல்களையும் ஓலிபரப்புச் செய்தார்.
பிராங்கின் இவ்விருமணிநேரப் பாடல் ஒலிபரப்பில் மூழ்கிப்போன மக்கள் தொலைபேசி மூலமும் கடிதங்கள் மூலமும் தமக்குப் பிடித்த பாடல்களை ஒலிபரப்புமாறு வேண்டுகோள் விடுத்தாhகள்;.
மேற்படி ஒலிபரப்புச் சேவையின் கேள்வி அதிகரித்ததுடன் வானொலி இயந்திரங்களின் வி;ற்பனையும் அதிகரிக்கத் தொடங்கியது. 1920 ஆம் ஆண்டு முனுமுயு எனும் வானொலி ஒலிபரப்புச் சேவைமூலம் வானொலி இயந்திரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்போவதாக அறிவி;க்கப்பட்டது. அப்போது அமெரிக்காவின் ஜனாபதித் தேர்தல் முடிவுகள் வானொலியின் மூலம் ஒலிபரப்புச் செய்யப்பட்டன. மேற்படி தேர்தல் முடிவுகளை சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கேட்டு மகிழ்ந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படித் தேர்தல் முடிவுகள் ஒலிபரப்பப்பட்டதுடன் வானொலி இயந்திரங்களின் விற்பனையும் அதிகரித்தது. அமெரிக்காவில் வானொலி இயந்திரத்திற்கான கேள்வி அதிகரித்ததையிட்டு 1921 ஆம் ஆண்டு வானொலி உற்பத்தி;க்கான அனுமதி 32 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இது 1922 இல் 254 ஆக அதிகரித்தது.
1923 ஆம் ஆண்டில் 500 நிலையான ஒலிபரப்புச் சேவை நிலையங்களும் 1400 சிறு ஒலிபரப்புச் சேவை நிலையங்களும் அமெரிக்காவில் அமைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு தமது தனிப்பட்ட ஆட்சியை நடத்திவந்த வானொலி ஒலிபரப்புச் சேவை 1940 இன் பின்னர் தொலைக்காட்சியின் வருகை காரணமாக வீழ்ச்சியை நோக்கி நகரத் தொடங்கியது. ஆயினும் தளர்ந்து விடாத வானொலி நிலையங்கள் தமது சேவையைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தன.இலங்கையில் வானொலிச் சேவையின்ஆரம்பமும் ஒலிபரப்பும் 1921 ஆம் ஆண்டு முதன்முறையாக அமெரிக்காவின் பிட்டர்க் நகரில் ஆரம்பிக்கப்பட்ட வானொலி ஒலிபரப்புச் சேவைகள், தொடர்ந்து வந்த நான்கு ஆண்டுகாலப்பகுதியில் இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, ஜப்பான் போன்ற நாடுகளிலும் ஆரம்பிக்கப்பட்டன.
1923 டீடீஊ நிறுவனமானது வானொலிபரப்புச் சேவையின் வளர்ச்சிக்காக சுயாதீன நிறுவனமாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்தியாவில் 1923 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மும்பாய் வானொலி ஒலிபரப்புநிலையம் அமைக்கப்பட்டு மார்க்கோணி நிறுவனத்தினால் கடன்வாங்கப்பட்ட நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டன. இதனுடனேயே ஜப்பானிலும் வானொலி ஒலிபரப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன.
பிரித்தானியா, இந்தியா, மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் வானொலிச் சேவையின் வளர்ச்சி அதிகரிக்கும் போது இலங்கைக்கும் அதன் தேவை அத்தியாவசியமாக விளங்கியது. மேற்படி வானொலி ஒலிபரப்புச் சேவையின் தேவையை உணர்ந்து பிரித்தானியக் குடியரசினால் 1921 ஆம் ஆண்டு இலங்கையிலும் வானொலி ஒலிபரப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன.
டெலிகிராப் இயந்திரம் குறித்த பிரதான என்ஜினியராக இலங்கைக்கு வருகை தந்த “எட்மன்ட் ஹாபன்” இது குறித்த ஆலோசனைகளை வழங்கினார். அச்சமயம் இலங்கையில் அமைக்கப்பட்டிருந்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டார்.
அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் கூட்டங்களை நடத்திய எட்மன்ட் தமது முயற்சியாலும் அனைவரது ஒத்துழைப்பாலும் 1924 ஜூன் 27 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு உத்தியோகப+ர்வமானமுறையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைத் திறந்து வைத்தார். செய்திகள், இசைநிகழ்ச்சிகள், அரச அறிவித்தல்கள், அரச அதிகாரிகளின் உரையாடல்கள் என்பன வானொலியில் ஒலிபரப்பப்பட்டதுடன் 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி கலையகம் ஒன்றை அமைத்து வானொலி ஒலிபரப்புச் சேவையில் வளர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது 160 ஊழியர்களைக் கொண்டிருந்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வாரத்தில் இரு நாட்கள் மட்டுமே ஒலிபரப்புக்களை மேற்கொண்டது.
1930 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேலும் பல வளர்ச்சிகளைக் கண்;ட இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பல்வேறுபட்ட தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டிருந்தது. இக்காலப்பகுதியில் டீடீஊ நிறுவனமும் அதன் என்ஜினியர்களும் இந்தியாவில் பல புதிய வானொலிச் செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தனர். அச்சமயம் இலங்கையிலும் அச்செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1940 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சர்வதேச சேவைகள் மற்றும் வர்த்தக சேவைகள் தொடர்பான தகவல்கள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளிலும் ஒலிபரப்பப்பட்டன. அத்துடன் பௌத்தசமயம் ,இந்துசமயம், கிறிஸ்தவம் மற்றும் முஸ்லீம்களுக்குச் சிறப்பான தினங்களில் அம்மதத்திற்குரிய நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பப்பட்டன.
இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் வானொலி ஒலிபரப்புச் சேவையை முறையாகக் கொண்டு நடாத்துவதற்காக அரச ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டதுடன் அதில் வானொலி ஒலிபரப்பு நிலையத்தின் நிர்வாகம், கலைஞர்களைத் திருப்திப்படுத்தல், மற்றும் நிகழ்ச்சிநிரல்களும் அவை ஒலிபரப்பப்படும் நேரங்களும் தீர்மானிக்கப்பட்டதுடன் தேசிய ஊடகமாக வானொலியினைப் பிரகடனப்படுத்துதல் குறித்தும் அவ்வாணைக் குழுக்கூட்டங்களில் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டது.
1960 ஆம் ஆண்டுகாலப் பகுதியின் பின்னர் அரச தலைவர்களின் உரைகள், அரச நிகழ்ச்சிகள், சமயநிகழ்ச்சிகளுக்காக வானொலி உபயோகப்படுத்தப்பட்டதுடன் 1965 ஆம் ஆண்டு இலங்கை வானொலி ஒலிபரப்புச் சேவையானது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அதன்பின்னரும் அரசியல் நிகழ்வுகள், கூட்டங்கள், அரசியல் உரைகள் என்பனவும் ஒலிபரப்பப்பட்டன. 1976 ஆம் ஆண்டிற்குப் பின்னரும் இந்;நிலை தொடர்ந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1994 ஆம் ஆண்டு சிரச (ளசையளய) எனும் பெயருடைய தனியார் வானொலி ஒலிபரப்புச் சேவையொன்று கு.ஆ எனும் அலைவரிசையினூடாக ஆரம்பிக்கப்பட்டதுடன் அதில் நவீன தொழிநுட்பமுறையினை உபயோகித்தல், நேரடி ஒலிபரப்புக்கள் மேற்கொள்ளப்படல், தொலைபேசி மூலம் நேயர்கள் தொடர்பு கொண்டு உரையாற்றக்கூடிய வசதிகளை அமைத்துக் கொடுத்;தல் போன்றவற்றை உள்ளடக்கியிருந்தனர்.
தொலைக்காட்சியின் வருகை காரணமாக வானொலியுடன் தொடரப்பட்டிருந்த நேயர்கள் மீண்டும் அதனைச் சுற்றி வட்டமிடக்கூடிய வகையில் இவ்வானொலி அலைவரிசை செயற்பட்டது. இது தவிர மேலும் பல வானொலி அலைவரிசைகள் உருவாக்கப்பட்டன. அவையாவன:- ஹிரு (ர்சைர) கு.ஆ, தரு (வுhயசர) கு.ஆ, ஸ்ரீ (ளுசi) கு.ஆ. லக்ஹண்ட (டரஉம hயனெய) , சூரியன் (ளுழழசயைn) கு.ஆஇ சக்தி (ளூயமவாi) கு.ஆஇ மற்றும் இசிர (ஐளசைய) கு.ஆஇ என்பன அவற்றுள் முதலிடங்களைப் பெற்றனவாகக் காணப்பட்டன.
இன்றைய நாள்வரை மேற்குறிப்பிட்ட வானொலி ஒலிபரப்புச் சேவைகளைத்; தவிர மேலும் பல வானொலி ஒலிபரப்புச் சேவைகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் மக்களைக் கவர்ந்திழுக்கக்கூடிய தொழிநுட்பம் மிக்க நிகழ்ச்pசகள் இடம்பெறுகின்றன. புதிய தொழிநுட்ப வசதி முறைகளின் கண்டுபிடிப்புக்கள் காரணமாக மென்மேலும் பல வானொலி ஒலிபரப்புச் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு வருவதுடன் அவை மக்கள் மத்தியி;ல் பிரபல்யமடையவும் காரணமாக அமைகின்றன.
தொலைக்காட்சி ஒளிபரப்புச் சேவை
வானொலி ஒலிபரப்புச் சேவையைப் போன்றே தொலைக்காட்சியின் அறிமுகத்திற்கும் நீண்டகால பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பரிசோதைனைகளின் பிரதிபலனாகவே தொலைக்காட்சி எனும் மக்கள் ஊடகம் வெளிப்பட்டது.
தொலைக்காட்சி ஊடகமானது ஸ்கேனிங் எனும் தொழிநுட்கத்தின் வாயிலாகவே உருவாக்கப்பட்டது. இந்த ஸ்கேனிங் தொழிநுட்பமானது வீடியோ கமராக்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
1884 ஆம் ஆண்டு போல் நிப்கோல் என்பவராலேயே இந்த ஸ்கேனிங் தொழிநுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இவரின் கண்டுபிடிப்பு குறித்து பரிசோதனைகளை நடத்திய பிரித்தானிய நாட்டு என்ஜினியரான ஜோன் லொகி பெயார் அதனை மேலும் விரிவான முறையில் பரிசோதனைகளுக்குள்ளாக்கி அதில் 8 ஸ்கேனிங் தொழிநுட்ப இரேகைகளைப் பயன்படுத்தியதுடன் 50 உருவப்படங்களையும் உள்ளடக்கினார். தாம் உள்ளடக்கிய உருவப்படங்களை ஒரு திரையில் பிரதிபலிக்கச் செய்த அவர் அத்திரையில் உருவப்படங்களை விட நிழல்களையே அதிகளவில் கண்டார்.
1929 ஆம் ஆண்டுகாலப் பகுதியில் டீடீஊ நிறுவனம் தமது பரிசோதனைகளுடன் கூடிய ஒளிபரப்பை மேற்கொண்டது. அப்போது ஸ்கேனிங் இரேகைகளின் எண்ணிக்கை 8 இலிருந்து 30 ஆக முன்னேற்றமடைந்திருந்தது. ஆயினும் உருவப்படங்கள் தெளிவற்றும் அசைவுத்தன்மை உடையனவாகவும காணப்பட்டன. முன்னரை விட ஓரளவு தெளிவான படங்கள் காணப்பட்ட போதிலும் ஒரு செக்கனுக்கு ஒளிபரப்பப்படும் படங்களின் எண்ணிக்கை 12 ஆக காணப்பட்டதால் அவை அசைவுத் தன்மையைக் கொண்டிருந்தன.
இமி ( ஐஅi ) நிறுவனம் மற்றும் மார்க்கோணி வயர்லஸ் டெலிகிராப் ( ஆயசமழni ஏசைடநளள வுநடநபசயிh ) நிறுவனம் ஆகிய இரண்டும் இணைந்து தொலைக்காட்சியை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததுடன் ஸ்கேனிங் தொழிநுட்ப இரேகைகளின் எண்ணிக்கையை 205 ஆகவும் ஒரு செக்கனுக்கு ஒளிபரப்பப்படும் படங்களின் எண்ணிக்கையை 25 ஆகவும் இதிகரிக்கச் செய்தன.
இவர்களின் பரிசோதனைகளை அடுத்து ஜோன் லொகீ பெயார் 240 ஸ்கேனிங் தொழிநுட்ப இரேகைகளையும் ஒரு செக்கனுக்கு 25 படங்களையும் ஒளிபரப்பினார்.
டீடீஊ நிறுவனமானது மேற்படி இரு முறைகளையும் உபயோகப்படுத்திக் கொண்டதுடன் ஜோன் லொகீ பெயாரின் கண்டுபிடிப்பு முறையை 1937 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை உபயோகப்படுத்தியதாக தெரியவந்துள்ளது. அந்த வகையில் தொலைக்காட்சி ஒளிபரப்பின் தந்தையாக ஜோன் லொகீ பெயாரே முன்மொழியப்பட்டார். ஆயினும் தொலைக்காட்சி ஒளிபரப்பானது தனிநபர் ஒருவரினால் ஒளிபரப்பப்பட முடியாததொன்றாகும்.
1928 ஆம் ஆண்டுகாலப் பகுதிகளிலேயே ஜோன் லொகீ பெயாரினால் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது. 1939 ஆம் ஆண்டுக் காலப்பகுதிகளில் அமெரிக்காவில் தொலைக்காட்சி உபயோகப்படுத்தப்பட்டதுடன் அதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்ட் வெல்ட் மக்களுக்கான உரைகளையும் நிகழ்த்தினார். ஆயினும் மக்கள் மத்தியில் அதுவரையில் இத் தொலைக்காட்சி இயந்திரம் பிரபல்யமடைந்திருக்கவில்லை.
அன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சி தொடர்பான அறிவு மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டிருக்காமையும் தொலைக்காட்சி உற்பத்தியில் வளர்ச்சி ஏற்பட்டிருக்காமையும் அது பிரபல்யமடைந்திருக்காமைக்கு காரணங்களாக விளங்கின.
1941 ஆம் ஆண்டு அமெரிக்காவின் குஊஊ நிறுவனத்திற்கு தொலைக்காட்சிகளை உற்பத்தி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. 2 ஆம் உலகப்போரின் பின்னர் ஏற்பட்ட பொருளாதார அபிவிருத்தியுடன் தொலைக்காட்சி உற்பத்தியும் வளர்ச்சியடைந்தது.
1948 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமெரிக்காவில் 70 தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்ததுடன் சுமார் 10 இலட்சம் தொலைக்காட்சி இயந்திரங்கள் உபயோகத்தில் இருந்துள்ளன. 1975 ஆம் ஆண்டின் பின்னர் ஜப்பான் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட தொலைக்காட்சிகள் சந்தைக்குள் பிரவேசித்ததும் தொலைக்காட்சிகளின் விலைகளும் குறைவடைந்து அவற்றின் உற்பத்திகளும் அதிகரித்தன.இலங்கையில் தொலைக்காட்சியின்அறிமுகமும் ஒளிபரப்பும்
1979 ஆம் ஆண்டு இலங்கையில் தொலைக்காட்சியை அறிமுகப்படுத்துவதற்காக இலங்கை அரசு ஜப்பான் அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தியது. இப்பேச்சுவார்த்தை இடம்பெற்ற காலகட்டத்தில் இலங்கையில் “சுயாதீனதொலைக்காட்சிசேவை” எனும் தனியார் ஒளிபரப்புச் சேவையொன்று ஷான் விக்கிரமசிங்க எனும் நபரால் பன்னிப்பட்டிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இத் தொலைக்காட்ச்p சேவையானது குறித்த சில பிரதேசங்களில் மட்டுமே வரையறுக்கப்பட்ட ஒளிபரப்பை மேற்கொண்டதுடன் அது ஆரம்பிக்கப்பட்டு 2 மாதகாலம் முடிவடைந்ததும் அந் நிறுவனத்தின் நிர்வாகம் தொடர்பாக அரசுடன் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக அந்நிறுவனம் அரச கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. தற்காலத்தில் ஐ.டி.என் (ஐவுN) எனும் பெயரில் இயங்கும் தொலைக்காட்சி ஒளிபரப்புச் சேவையே அதுவாகும்.
மேற்படி தொலைக்காட்சி ஒளிபரப்புச் சேவைக்கு இணையான தொலைக்காட்சி சேவையொன்றை ஆரம்பிக்க எண்ணிய இலங்கை அரசாங்கம் இலங்கை வானொலி ஒலிபரப்பு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தியது.
மேற்படி பேச்சுவார்த்தையின் பின்னர் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு அவசியமான ஊடகவியலாளர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக நாரஹேன்பிட்டியில் பயிற்சி நிலையமொன்றையும் அமைத்தனர்.
1982 பெப்ரவரி 15 ஆம் திகதி ஜப்பான் அரசுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பிரதிபலனாக இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் முதலாவது ஒளிபரப்பாக பிரித்தானிய மகாராணியார் இலங்கைக்கு வந்த சம்பவத்தை ஒளிபரப்புச் செய்தனர்.
இதன் முதலாவது தலைவராக எம்.ஜே. பெரேரா தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் இதற்கான கலையகம் ஒன்று 1989 ஜுன் 2 ஆம் திகதி 20 இலட்சம் ரூபா பெறுமதியான சாதனங்களுடன் அமைக்கப்பட்டதுடன் இதில் ஒரே நேரத்தில் 12 பேர் செயற்படக்கூடியதாக அமைந்திருந்தது.
1992 ஏப்ரலில் எம்.டீவி, என்ற தனியார் நிறுவனம் தொலைக்காட்சி ஓளிபரப்புக்களை ஆரம்பித்தது. 1995ன் பிற்பகுதியில் அதன் ஒளிபரப்புக்களை விஸ்தரித்ததுடன் பின் சிரச டீவி, சக்தி டீவி, என்பனவற்றையும் ஆரம்பித்தது. சக்தி டீவி தனக்கென ஒரு பாதையை வகுத்து நிகழ்ச்சிளை வழங்கி வருகின்றது. வட-கிழக்கு உட்பட நாட்டின் எல்லாப் பக்கங்களுக்கும் தனது சேவையை மேற்கொண்டு வருகிறது. யாழ்க்குடாநாட்டில் ஒளிபரப்பாகும் ஒரே ஒரு தனியார் தொலைக்காட்சி இது மட்டும்தான். இனங்களினது பண்பாட்டுப் புரிதலினாலும் நம்பிக்கையை பேணுவதினாலும் இலங்கையில் மட்டுமல்லாது சர்வசே ரீதியிலும் பிரபல்யம் அடைந்;துள்ளது.
1993 ஜூலை 21ம் திகதி டீ.என்.எல். என்ற பெயரில் இன்னுமொரு தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது. 1993ம் ஆண்டு பீ.பீ.சி. யும் ஸ்டார் ஸ்போட்ஸ் ( ளுவயச ளுpழவள )உம் சேர்ந்து ஈ.டீ.வி.( நு.வுஎ ) என்ற பெயரில் ஒரு ஒளிபரப்பு ஆரம்பிக்கப்பட்டது.
ஈ.ஏ.பீ. எதிரிசிங்க கூட்டு வியாபார நிறுவனம் 1996 மார்ச் 26ம் திகதி ஈ.டீ.வி. சேவையை விலைக்கு வாங்கியது. அதிலே வெளிநாட்டுச் செய்திகளையும், மேலைத்தேயத் திரைப்படங்பளையும் ஒளிபரப்பியது. இதன் பின்னர் 1997 மார்ச் 16ம் திகதி; சுவர்ணவாஹினி என்ற பெயரில் சிங்கள மொழி மூல தொலைக்காட்சி சேவையை ஆரம்பித்து இன்றுவரை ஒளிபரப்பி வருகின்றது.
இப்பொழுதுள்ள பொருளாதார நிலைமையில்; இலத்திரனியல் ஊடகங்கள் பாரிய போட்டிகளுக்கு முகம் கொடுத்து முன்னேறிச்சேல்ல வேண்டிய கடப்பாடு காணப்படுகிறது. இலத்திரனியல் ஊடகங்களின் வர்த்தக நோக்கங்களுக்காகவும், வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்காகவும் கூடுதலாக இளைஞர்களைக் குறித்தே நிகழ்ச்சிகள் ஒலி, ஒளிபரப்பப்படுகின்றன.
உலகம் மாறிவரும் இந்தக் காலகட்டத்தில் இலத்திரனியல் ஊடகங்களின் தேவையும், கேள்வியும் அதிகரிதிதுள்ள நிலையில் ஊடகங்கள் பொது மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் வகையில் செயற்பட வேண்டும்.
கழிவுப் பிரச்சினை எப்போது தீரும்
எம்.மேனகா
கண்டி மாநகரசபைக்கு உட்பட்ட கடுகஸ்தொட்டை கொஹாகொட பிரதேசத்தில் அமைந்த தேக்கவத் தைப் கிராமத்தில் கொட்டப்படும்; மலசலகூடக் கழிவுகள் உரிய முறையில் அகற்றப்படாமையினால் அப்பிரதேச மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதா க அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்படி பிரதேசத்தில் கொட்டப்ப டும் கழிவுகள் பொல்வத்தை மற் றும் தேக்கவத்தை ஆகிய இரு கிராமங்களுக்கு இடையில் அமைந் துள்ள கால்வாயினூடாக இலங் கையின் பிரதான கங்கையான மகாவலி கங்கையுடன் இணைவ தால் அதன் மூலம் பயன்பெரும் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாவதுடன் விவசாய நடவடிக் கைகள் மற்றும் நீர்ப்பாசன நடவ டிக்கைகள் என்பனவும் பாதிப்ப டைந்துள்ளன. மேற்படி கழிவுகள் அநுராத புரம், பொலன்னறுவை, திரு கோணமலை, மற்றும் கந்தளாய் போன்ற பிரதேசங்களுக்கு நீரை விநியோகிக்கும் பொல்கொல்லை நீர்த்தேக்கத்துக்கு ஒரு கிலோ மீற்றர் அப்பால் ஓடும் மகாவலி கங் கையிலேயே கலக்கப்படுகின்றன. இதனால் மேற்படி கழிவுகள் காரணமாக அப்பிர தேச வாசிகள் மட்டுமன்றி மகாவலி கங்கையினால் பயன் பெரும் அனைத்துப் பிர தேசவாசிகளும் பாதிக்கப் படுகின்ற னர். இவ்வாறு இலங்கையின் அனை த்துப் பிரதேச வாசிகளையும்பாதிப்புக்கு உள்ளாக்கும் முறையற்ற கழிவகற்றல் தொடர்பாக தேக்கவத் தைப் பிரதேச வாசியானஆர்.ஜி.எஸ்.பீ.கே.ரத்த ம்பேகொட தெரிவித்ததாவது:- கண்டி மாநகரில் அமைந்துள்ள வைத்தியசாலைகள் மற்றும் மாடிக் கட்டிடங்களில் இருந்து பவுசர் ரக வண்டிகள் மூலம் எடுத்துவ ரப்படும் மலசலக்கூடக் கழிவுகள் மற்றும் நடமாடும் மலசலக் கூடங்களில் சேகரிக்கப்படும் கழிவுகள்அனைத்தும் இப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டு ள்ள கழிவுத் தாங்;கிகளிலேயே கொட்டப்படுகின்றன. இக்கழிவுகள்உரிய முறையில் வடிகட்டப்பட்டு அத்தாங்கிகளில் இருந்து அகற்ற ப்படுவதாக மாநகர சபை அதிகா ரிகள் தெரிவித்த போதிலும் அவை எந்த மாற்றங்களுக்கும் உள்ளாக் கப்படாமலேயே மேற்படி இரு கிராமங்களுக்கு இடைப்பட்ட கால் வாயினூடாக ஆற்றுடன் கலக்கின் றன.இவ்விரு கிராம மக்களும் மேற்படி ஆற்றிலேயே குளித்து வருவதால் அவர்களுக்கு இதுவரை யில் இலங்கையில் ஏற்பட்ட அனைத்துவித தொற்று நோய்களும் ஏற்பட்டுள்ளன. இது குறித்து பலமுறை நகரசபை அதிகாரிகள் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகள் ஆகியோருக்கு அறி வித்துவிட்டோம்.
ஆயினும் அத னால் எந்தவிதப் பயனும் எமக்கு ஏற்படவில்லை. ஒரு நாளைக்கு சுமார் 20 வண்டிகள் மூலம் மேற்படி கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டுகின்றனர். அவர்கள் அவற் றை இந்தஇடத்தில் கொட்டு வதைப் போலவே அவற்றை உரிய முறை யில் அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தானே என்று அவர் மேலும் தெரிவிக் ;கிறார். மேலும் மேற்படி கழிவுத் தாங் கிகள் அமைக் கப்பட்டுள்ள பகு திக்கு அண்மை யிலேயே கண்டி மாநகரில் சேகரிக் கப்படும் குப்பைகளும் கொட் ;டப்படுகின்றன. சுமார் 4 ஏக்கர் நிலப்பரப்பில் கொட்டி குவிக்கப்ப ட்டுள்ள மேற்படி குப்பைகளும் கழிவுகளும் மழைக் காலத்தில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு மேற்படி கிராம வாசிகளை பெரும் சிரமங்களுக்கு ஆளாக்குகின்றது. இது குறித்து தேக்கவத்தை போதிமலு விகாரையின் பௌத்த பிக்குவான பல்லேகம நந்தசிறி தெரிவித்ததாவது:- இந்த தேக்க வத்தைக் கிரமத்தில் மட்டும் சுமார் 40 குடும்பங்கள் வசித்து வருகின ;றன. அக்குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் மேற்படி கால்வாயினூ டாக கழிவுகள் போய்ச்சேரும் ஆற் றுப் பகுதியிலேயே குளிக்கின்;றனர். அவர்களுக்கான குடிநீரை இந்த விகாரையில் உள்ள குழாயிலிருந்தே பெற்றுக் கொள்கின்றனர். இந்த கழிவுப் பிரச்சினை பல ஆண்டுகளாக இருந்து வருகின்றது. இம்மக்கள் அப்பிரச்சினை குறித்து அதிகாரிகளுக்கு முறைப் பாடு செய்தே சலிப்ப டைந்துவிட்டனர். ஆயி னும் உரிய அதிகாரிகள் அதற்கான தீர்வை இது வரையில் மேற்கொள்ள வில்லை. அவ்வதிகாரி கள் இதற்கான தீர்வை வெகுவிரைவில் மேற் டிகொள்ள வேண்டும் என்று நாம் எதிர்ப்பார்க் கிறோம் என அவர் தெரிவிக்கிறார். மேற்படி மக்களின் முறைப்;பாடுகள் குறித்து அக்கழி வுத்தாங்கிகளின் நிர்வாகப் பொறுப்பை வகிக்கும் பிரதான வைத்திய அதிகாரியான அசோக செனரத்திடம் விசாரித்த போது அவர் தெரிவித்ததாவது:-
அக்கழிவுத் தாங்கிகளுக்குள் கொட்டப்படும் மலசலகூடக் கழிவுகள் அனைத்தும் மோட்டார் இயந்திரங் கள் மூலம் வடிகட்டப்பட்டு அவை பாரிய குழிக ளில் புதைக்கப்படுகி ன்றன. இவ்வாறு அவை குழிகளில் புதைக்கப்ப டும் நடவடிக்கை 3 மாதத்திற்கு ஒருமுறை மேற்கொள் ளப்பட்டு வருகின்றது. மேலும் அவை வடிகட்டுவதற்காகப் பயன் படுத்தப்படும்; இயந்திரங்களும் 6 மாத காலங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படு கின்றன.
இக்கிராம மக்கள் தெரிவிப்பதைப் போன்று அக்கழி வுகள் மகாவலி கங்கையில் கலக் ;கப்படுவதில்லை. அத்துடன் அக் கழிவுத் தாங்கிகளால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலேயே அவை அங்கிருந்து அகற்றப்படுகின்றன என்று அவர் தெரிவிக்கிறார்.
ஆனால் தேக்கவத்தைக் கிராமவாசிகளால் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது அதுகுறித்து அவ்வதிகார சபையின் சிரேஷ்ட விசாரணை அதிகாரியான சம்பத் கஹாவத்தையிடம் கேட்ட போது:-
தேக்கவத்தைப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து மாநகர சபை அதிகாரிகளே தீர்வு காண முடியும். இது தொடர்பாக எம்மாலான அனைத்து விசாரணை நடவடிக்கைகளையும் நாம் மேற் கொண்டுவட்டோம். நாம் இப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டு மாயின் உரிய அரச நிறுவனங் களும் தனியார் நிறுவனங்களும் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் தெரிவிக்கி றார். இக்கழிவு அகற்றல் பிரச்சினைக்கு தீர்வை வழங்கக் கூடிய கண்டி மாநகர சபை மேயர் எல்.பீ. அலு விஹாரையிடம் கேட்ட போது அவர் இதுகுறித்து எவ்வித கருத்துக்க ளையும் தெரிவிக்க மறுத்து விட்டார்.
மேற்படி பிரதேசத்தில் கொட்டப்ப டும் கழிவுகள் பொல்வத்தை மற் றும் தேக்கவத்தை ஆகிய இரு கிராமங்களுக்கு இடையில் அமைந் துள்ள கால்வாயினூடாக இலங் கையின் பிரதான கங்கையான மகாவலி கங்கையுடன் இணைவ தால் அதன் மூலம் பயன்பெரும் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாவதுடன் விவசாய நடவடிக் கைகள் மற்றும் நீர்ப்பாசன நடவ டிக்கைகள் என்பனவும் பாதிப்ப டைந்துள்ளன. மேற்படி கழிவுகள் அநுராத புரம், பொலன்னறுவை, திரு கோணமலை, மற்றும் கந்தளாய் போன்ற பிரதேசங்களுக்கு நீரை விநியோகிக்கும் பொல்கொல்லை நீர்த்தேக்கத்துக்கு ஒரு கிலோ மீற்றர் அப்பால் ஓடும் மகாவலி கங் கையிலேயே கலக்கப்படுகின்றன. இதனால் மேற்படி கழிவுகள் காரணமாக அப்பிர தேச வாசிகள் மட்டுமன்றி மகாவலி கங்கையினால் பயன் பெரும் அனைத்துப் பிர தேசவாசிகளும் பாதிக்கப் படுகின்ற னர். இவ்வாறு இலங்கையின் அனை த்துப் பிரதேச வாசிகளையும்பாதிப்புக்கு உள்ளாக்கும் முறையற்ற கழிவகற்றல் தொடர்பாக தேக்கவத் தைப் பிரதேச வாசியானஆர்.ஜி.எஸ்.பீ.கே.ரத்த ம்பேகொட தெரிவித்ததாவது:- கண்டி மாநகரில் அமைந்துள்ள வைத்தியசாலைகள் மற்றும் மாடிக் கட்டிடங்களில் இருந்து பவுசர் ரக வண்டிகள் மூலம் எடுத்துவ ரப்படும் மலசலக்கூடக் கழிவுகள் மற்றும் நடமாடும் மலசலக் கூடங்களில் சேகரிக்கப்படும் கழிவுகள்அனைத்தும் இப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டு ள்ள கழிவுத் தாங்;கிகளிலேயே கொட்டப்படுகின்றன. இக்கழிவுகள்உரிய முறையில் வடிகட்டப்பட்டு அத்தாங்கிகளில் இருந்து அகற்ற ப்படுவதாக மாநகர சபை அதிகா ரிகள் தெரிவித்த போதிலும் அவை எந்த மாற்றங்களுக்கும் உள்ளாக் கப்படாமலேயே மேற்படி இரு கிராமங்களுக்கு இடைப்பட்ட கால் வாயினூடாக ஆற்றுடன் கலக்கின் றன.இவ்விரு கிராம மக்களும் மேற்படி ஆற்றிலேயே குளித்து வருவதால் அவர்களுக்கு இதுவரை யில் இலங்கையில் ஏற்பட்ட அனைத்துவித தொற்று நோய்களும் ஏற்பட்டுள்ளன. இது குறித்து பலமுறை நகரசபை அதிகாரிகள் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகள் ஆகியோருக்கு அறி வித்துவிட்டோம்.
அக்கழிவுத் தாங்கிகளுக்குள் கொட்டப்படும் மலசலகூடக் கழிவுகள் அனைத்தும் மோட்டார் இயந்திரங் கள் மூலம் வடிகட்டப்பட்டு அவை பாரிய குழிக ளில் புதைக்கப்படுகி ன்றன. இவ்வாறு அவை குழிகளில் புதைக்கப்ப டும் நடவடிக்கை 3 மாதத்திற்கு ஒருமுறை மேற்கொள் ளப்பட்டு வருகின்றது. மேலும் அவை வடிகட்டுவதற்காகப் பயன் படுத்தப்படும்; இயந்திரங்களும் 6 மாத காலங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படு கின்றன.
இக்கிராம மக்கள் தெரிவிப்பதைப் போன்று அக்கழி வுகள் மகாவலி கங்கையில் கலக் ;கப்படுவதில்லை. அத்துடன் அக் கழிவுத் தாங்கிகளால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலேயே அவை அங்கிருந்து அகற்றப்படுகின்றன என்று அவர் தெரிவிக்கிறார்.
ஆனால் தேக்கவத்தைக் கிராமவாசிகளால் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது அதுகுறித்து அவ்வதிகார சபையின் சிரேஷ்ட விசாரணை அதிகாரியான சம்பத் கஹாவத்தையிடம் கேட்ட போது:-
தேக்கவத்தைப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து மாநகர சபை அதிகாரிகளே தீர்வு காண முடியும். இது தொடர்பாக எம்மாலான அனைத்து விசாரணை நடவடிக்கைகளையும் நாம் மேற் கொண்டுவட்டோம். நாம் இப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டு மாயின் உரிய அரச நிறுவனங் களும் தனியார் நிறுவனங்களும் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் தெரிவிக்கி றார். இக்கழிவு அகற்றல் பிரச்சினைக்கு தீர்வை வழங்கக் கூடிய கண்டி மாநகர சபை மேயர் எல்.பீ. அலு விஹாரையிடம் கேட்ட போது அவர் இதுகுறித்து எவ்வித கருத்துக்க ளையும் தெரிவிக்க மறுத்து விட்டார்.
Wednesday, November 14, 2007
துப்பாக்கிதாரிகளாக மாறியுள்ள அரசியல்வாதிகள்
மேனகா மூக்காண்டி
நாட்டின் அரசியல்வாதிகள்; பலர் துப்பாக்கிதாரிகளாக மாறி தமது கருத்துக்கெதிராக செயற்படுபவர்களை நோக்கி துப்பாக் கியையை நீட்டிக்கொண்டிருக்கி றார்கள்.இதுபற்றி கடந்த சில தினங்களாகவே ஊடகங்களில் தொடர்ந்தும் செய்திகள் வெளிவந்தவண்ணமிருந்தன.
எமது நாட்டின் மிகவும் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்களான மர்வின் சில்வா, மஹிந்தானந்தா அலுத்கமகே மற்றும் கே.ஏ.பாயிஸ் ஆகியோரே இந்த சலசலப்புக்குள்ளானவர்கள். இவ்வமைச்சர்களின் சுய பாதுகாப்பு கருதி அரசாங்கத் தால் வழங்கப்பட்ட கைத்துப் பாக்கிகளை தமது தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு சட்ட விரோதமான முறையில் இவர்கள் உபயோகிக்க முயன்றுள்ளனர்.
எனவே இந்த துப்பாக்கி விடயம் பற்றி சில அரசியல்வாதிகளிடம் கேட்டோம்.
ஐக்கிய தேசிய கட்சியின்
பாராளுமன்ற உறுப்பினர்
ஜோன் அமரதுங்க :-
“1971 மற்றும் 1989 ஆம் ஆண்டு காலப் பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி யினரால் கலவரங்கள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காக அமர்த் தப்பட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் நிலவியது. இவர்களின் பாதுக்காப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசாங்கத்தால் வழங்க முடியாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆகவே அவர்கள் தமது சுயபாதுகாப்பை மேற்கொள்வதற்காக அப்போதைய அரசாங்கத்தால் கைத்துப்பாக்கிகளும் அதற்கான அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டன.
மேற்படி கலவரங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதிலும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கைத்துப்பாக்கிகளைப் பாவிக்க முடியும் என்ற சட்டமூலம் மட்டும் தொடர்ந்தும் இன்றுவரை அமுலிலேயே உள்ளது.
இந்த கைத்துப்பாக்கியினை இவர்கள் அரசிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். அல்லது வெளிநாடுகளிடமிருந்து கொள்வனவு செய்ய முடியும். ஆனால் இத்துப்பாக்கிப் பாவனையானது தமது உயிருக்கு அல்லது சொத்து க்களுக்கு ஏதாவது அபாயம் ஏற்படும் சந்தர்ப்பத்திலேயே உபயோகிக்க முடியும். இது தவிர்ந்து ஒருவரை பயமுறு த்துவதற்காகவோ அல்லது அதன் மூலம் தமக்கான இலாபங்களை உழைத்துக் கொள்வதற்காகவும் அதனை உபயோகிக்க முடியாது” என்று அவர் தெரிவித்தார்.
இந்த துப்பாக்கிகளானவை அமைச்சரோ அல்லது பாராளுமன்ற உறுப்பினரோ கேட்கும் பட்சத்திலேயே வழங்கப்படுகின்றன. அது தவிர்ந்து இவற்றை அரசாங்கம் அவர்களுக்கு கட்டாயப்படுத்தி வழங்குவதில்லை.
எமது நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நாட்டின் பொறுப்புமிக்க மதத் தலைவர்களான பிக்குமார்களும் அங்கம் வகிக்கின்றனர். “அஹிம்சையைக் கடைபிடிப்போம். ஆயுதங்களைக் கையாள்வதிலிருந்து விலகுவோம் என்று கூறும் கௌதம புத்தரின் வாக்குப் பிரகாரம் செயற்படும் பிக்குகளும் இந்த சுயபாது காப்புக்கான கைத்துப்பாக்கி களைப் பயன்படுத்துகின்றனரா என அறியமுற்பட்டோம்
ஹெல உறுமயவின்
பாராளுமன்ற உறுப்பினர்
அத்துரலியே ரத்தின தேரர் :-
“ ஒருவரின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்ற பட்சத்தில் இந்த துப்பாக்கி களைப் பயன்படுத்தலாம். ஆனால் பிக்குமார்களாகிய நாம் அவ்வாறு பயன்படுத்துவதில்லை. இந்த துப்பாக்கிகளை சட்ட அனுமதியுடனேயே உபயோகிக்க முடியும். அதனையும் மீறி உபயோகிப்ப வர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடி யும் என்று தேரர் தெரிவித்தார்.
தமது சுய பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கி களைப் பொது இடங்களில் பாவித்து சர்ச்சைக்குள்ளான பொறுப்பு வாய்ந்த அமைச்சர் என்ன சொல்கிறார்?
கால்நடைவளப் பிரதி அமைச்சர்
கே.ஏ.பாயிஸ்:-
“நான் புத்தளத்தில் துப்பாக்கி யைப் காட்டியது சிறு விடயம். ஆனால் எமது நாட்டின் ஊடகங்கள் அதனை பாரிய பிரச்சினையாக்கி விட்டன. உண்மையில் அன்று என்ன நடந்தது என்றால், பாராளுமன்ற உறுப்பினரான றிஷாட்டுக்கும் எனக்கும் இடையே வாக்கு வாதமொன்று இடம்பெற்றது. அவர் புத்தளத்தில் நிலவும் அரசியல் நடவடிக்கைகளைக் குழப்பும்; வகையிலான செயற் பாடுகளில் ஈடுபட்டார். அவ்வா றான செயல்கள் தவறு என்று கூறச் சென்ற அனைவரையும் பார்த்து தராதரமின்றி பேச ஆரம்பித்தார். அவரது அப்பேச்சு க்கு எதிர்ப்பு தெரிவித்த நாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது எழுந்த பிரச்சனையின் போதுதான் என்னிடமும் துப்பாக்கி இருக் கிறது என்று எடுத்துக் காட்டினேன்.நான் துப்பாக்கியைக் காட்டிய விடயத்தைப் பெரிது படுத்திய றிஷாட் துப்பாக்கியைக் காட்டி கடைகளையெல்லாம் மூடச்செய்ததாக ஊடகங்கள் வாயிலாக செய்திகளைப் பரப்பி விட்டார். உண்மையில் நான் எவரையும் துப்பாக்கி காட்டி மிரட்டவில்லை. குறைந்த பட்சம் பாராளுமன்ற உறுப்பினரான றிஷாட்டிடம் கூட துப்பாக்கியைக் காட்டி மிரட்டவில்லை. அவ்வாறு நான் மிரட்டினேன் என்று நிரூபித்தால் எனது அமைச்சுப் பதவியைக் கூட விட்டுச் செல்ல தயாராகவுள்ளேன்” என்று கூறியுள்ளார்.
இவர் சொல்வதை நாம் ஏற்றுக்கொள்வோம். ஆனாலும் பொறுப்பு வாய்ந்த அமைச்சராகவுள்ள ஒருவர் அத்துப்பாக்கி கொடுக்கப்பட்ட காரணத்தையும் மீறி பொது இடத்தில் அதை வெளிப்படுத்தி அதனூடாக தனது பலத்தை நிரூபிக்க முயன்றது தவறே. இந்த இடத்தில் மர்வின் சில்வா மிக வெளிப்படையாகவே துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளார். எனவே இந்த துப்பாக்கிகள் சுய பாதுகாப்புக்க வழங்கப்பட்டுள்ளன என்பதன் அர்த்தம் மாறி சுய அரசியல் அதிகாரத்தை தக்க வைக்கும் அல்லது தமது இருப்பை நிலை நிறுத்த பயன்படுத்தியுள்ளனர்.
நாட்டின் அரசியல்வாதிகள்; பலர் துப்பாக்கிதாரிகளாக மாறி தமது கருத்துக்கெதிராக செயற்படுபவர்களை நோக்கி துப்பாக் கியையை நீட்டிக்கொண்டிருக்கி றார்கள்.இதுபற்றி கடந்த சில தினங்களாகவே ஊடகங்களில் தொடர்ந்தும் செய்திகள் வெளிவந்தவண்ணமிருந்தன.
எமது நாட்டின் மிகவும் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்களான மர்வின் சில்வா, மஹிந்தானந்தா அலுத்கமகே மற்றும் கே.ஏ.பாயிஸ் ஆகியோரே இந்த சலசலப்புக்குள்ளானவர்கள். இவ்வமைச்சர்களின் சுய பாதுகாப்பு கருதி அரசாங்கத் தால் வழங்கப்பட்ட கைத்துப் பாக்கிகளை தமது தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு சட்ட விரோதமான முறையில் இவர்கள் உபயோகிக்க முயன்றுள்ளனர்.
எனவே இந்த துப்பாக்கி விடயம் பற்றி சில அரசியல்வாதிகளிடம் கேட்டோம்.
ஐக்கிய தேசிய கட்சியின்
பாராளுமன்ற உறுப்பினர்
ஜோன் அமரதுங்க :-
“1971 மற்றும் 1989 ஆம் ஆண்டு காலப் பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி யினரால் கலவரங்கள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காக அமர்த் தப்பட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் நிலவியது. இவர்களின் பாதுக்காப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசாங்கத்தால் வழங்க முடியாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆகவே அவர்கள் தமது சுயபாதுகாப்பை மேற்கொள்வதற்காக அப்போதைய அரசாங்கத்தால் கைத்துப்பாக்கிகளும் அதற்கான அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டன.
மேற்படி கலவரங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதிலும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கைத்துப்பாக்கிகளைப் பாவிக்க முடியும் என்ற சட்டமூலம் மட்டும் தொடர்ந்தும் இன்றுவரை அமுலிலேயே உள்ளது.
இந்த கைத்துப்பாக்கியினை இவர்கள் அரசிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். அல்லது வெளிநாடுகளிடமிருந்து கொள்வனவு செய்ய முடியும். ஆனால் இத்துப்பாக்கிப் பாவனையானது தமது உயிருக்கு அல்லது சொத்து க்களுக்கு ஏதாவது அபாயம் ஏற்படும் சந்தர்ப்பத்திலேயே உபயோகிக்க முடியும். இது தவிர்ந்து ஒருவரை பயமுறு த்துவதற்காகவோ அல்லது அதன் மூலம் தமக்கான இலாபங்களை உழைத்துக் கொள்வதற்காகவும் அதனை உபயோகிக்க முடியாது” என்று அவர் தெரிவித்தார்.
இந்த துப்பாக்கிகளானவை அமைச்சரோ அல்லது பாராளுமன்ற உறுப்பினரோ கேட்கும் பட்சத்திலேயே வழங்கப்படுகின்றன. அது தவிர்ந்து இவற்றை அரசாங்கம் அவர்களுக்கு கட்டாயப்படுத்தி வழங்குவதில்லை.
எமது நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நாட்டின் பொறுப்புமிக்க மதத் தலைவர்களான பிக்குமார்களும் அங்கம் வகிக்கின்றனர். “அஹிம்சையைக் கடைபிடிப்போம். ஆயுதங்களைக் கையாள்வதிலிருந்து விலகுவோம் என்று கூறும் கௌதம புத்தரின் வாக்குப் பிரகாரம் செயற்படும் பிக்குகளும் இந்த சுயபாது காப்புக்கான கைத்துப்பாக்கி களைப் பயன்படுத்துகின்றனரா என அறியமுற்பட்டோம்
ஹெல உறுமயவின்
பாராளுமன்ற உறுப்பினர்
அத்துரலியே ரத்தின தேரர் :-
“ ஒருவரின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்ற பட்சத்தில் இந்த துப்பாக்கி களைப் பயன்படுத்தலாம். ஆனால் பிக்குமார்களாகிய நாம் அவ்வாறு பயன்படுத்துவதில்லை. இந்த துப்பாக்கிகளை சட்ட அனுமதியுடனேயே உபயோகிக்க முடியும். அதனையும் மீறி உபயோகிப்ப வர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடி யும் என்று தேரர் தெரிவித்தார்.
தமது சுய பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கி களைப் பொது இடங்களில் பாவித்து சர்ச்சைக்குள்ளான பொறுப்பு வாய்ந்த அமைச்சர் என்ன சொல்கிறார்?
கால்நடைவளப் பிரதி அமைச்சர்
கே.ஏ.பாயிஸ்:-
“நான் புத்தளத்தில் துப்பாக்கி யைப் காட்டியது சிறு விடயம். ஆனால் எமது நாட்டின் ஊடகங்கள் அதனை பாரிய பிரச்சினையாக்கி விட்டன. உண்மையில் அன்று என்ன நடந்தது என்றால், பாராளுமன்ற உறுப்பினரான றிஷாட்டுக்கும் எனக்கும் இடையே வாக்கு வாதமொன்று இடம்பெற்றது. அவர் புத்தளத்தில் நிலவும் அரசியல் நடவடிக்கைகளைக் குழப்பும்; வகையிலான செயற் பாடுகளில் ஈடுபட்டார். அவ்வா றான செயல்கள் தவறு என்று கூறச் சென்ற அனைவரையும் பார்த்து தராதரமின்றி பேச ஆரம்பித்தார். அவரது அப்பேச்சு க்கு எதிர்ப்பு தெரிவித்த நாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது எழுந்த பிரச்சனையின் போதுதான் என்னிடமும் துப்பாக்கி இருக் கிறது என்று எடுத்துக் காட்டினேன்.நான் துப்பாக்கியைக் காட்டிய விடயத்தைப் பெரிது படுத்திய றிஷாட் துப்பாக்கியைக் காட்டி கடைகளையெல்லாம் மூடச்செய்ததாக ஊடகங்கள் வாயிலாக செய்திகளைப் பரப்பி விட்டார். உண்மையில் நான் எவரையும் துப்பாக்கி காட்டி மிரட்டவில்லை. குறைந்த பட்சம் பாராளுமன்ற உறுப்பினரான றிஷாட்டிடம் கூட துப்பாக்கியைக் காட்டி மிரட்டவில்லை. அவ்வாறு நான் மிரட்டினேன் என்று நிரூபித்தால் எனது அமைச்சுப் பதவியைக் கூட விட்டுச் செல்ல தயாராகவுள்ளேன்” என்று கூறியுள்ளார்.
இவர் சொல்வதை நாம் ஏற்றுக்கொள்வோம். ஆனாலும் பொறுப்பு வாய்ந்த அமைச்சராகவுள்ள ஒருவர் அத்துப்பாக்கி கொடுக்கப்பட்ட காரணத்தையும் மீறி பொது இடத்தில் அதை வெளிப்படுத்தி அதனூடாக தனது பலத்தை நிரூபிக்க முயன்றது தவறே. இந்த இடத்தில் மர்வின் சில்வா மிக வெளிப்படையாகவே துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளார். எனவே இந்த துப்பாக்கிகள் சுய பாதுகாப்புக்க வழங்கப்பட்டுள்ளன என்பதன் அர்த்தம் மாறி சுய அரசியல் அதிகாரத்தை தக்க வைக்கும் அல்லது தமது இருப்பை நிலை நிறுத்த பயன்படுத்தியுள்ளனர்.
வரவு செலவுத் திட்டம் யுத்தத்திற்காகவா? மக்களுக்காகவா?
மேனகா மூக்காண்டி
புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு இன்னும் 5நாட்களே உள்ளன. எதிர்வரும் 7ஆம் திகதி நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் 2008 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்;பிக்கப்படவுள்ளது. இது மஹிந்த சிந்தனையின் கீழ் சமர்ப்பிக்கப்படும் மூன்றாவது வரவு செலவுத் திட்டமாகும்.
வரவு செலவுத் திட்டத்தோடிணைந்து அரசியலிலும் பிரச்சினைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. பொருட்களின் விலையேற்றத்தால் பாரிய வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்குள்; சிக்குண்டுள்ள மக்களின் எதிர்பார்ப்பு புதிய வரவு செலவுத் திட்டம் இதற்கெல்லாம் சுமுகமான தீர்வொன்றைப் பெற்றுத்தரும் என்பதே ஆகும்.இந்த வரவு செலவுத் திட்டம் மக்கள் மத்தியில் மட்டுமன்றி அரசியல்வாதிகள் பொருளாதார நிபுணர்கள் மத்தியிலம் பலத்த எதிர்பார்ப்பினைத் தோற்றுவித்துள்ளது.அந்த வகையில் வரவு செலவுத் திட்டம் குறித்து சிலர் வீச்சுக்காகத் தெரிவித்தவை இவை.
ஐ.தே.க.வின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க
எமது அரசாங்கம் சகல நடவடிக்கைகளிலும் போரை முன்னிலைப்படுத்துகிறது. அந்த முன்னுரிமை இம்முறை வரவு செலவுத் திட்டத்துக்கும் வழங்கப்பட்டிருக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன். ஆனால் இன்றைய சூழ்நிலையில் எமது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை பொருட்களின் விலையேற்றமே. இது பற்றி உரிய அமைச்சர்களிடம் கேட்டால் உலக சந்தையில் நிலவும் பொருட்களின் விலையேற்றமே இதற்குக் காரணம் என்கிறார்கள். உண்மையில் உலக சந்தையின் பொருள்; விலையேற்றம் எமது நாட்டில் மட்டுமா பாதிப்பை ஏற்படுத்துகிறது. உலகின் வேறு நாடுகளுக்கு அந்த பாதிப்பு இருப்பதாக தெரியவில்லையே.
பாராளுமன்ற உறுப்பினர்ஸ்ரீபதி சூரியாராச்சி;மஹிந்த சிந்தனையில் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் ஒழுங்காகக் கடைபிடிக்காமையே இங்குள்ள பிரச்சினை. வாழ்க்கைச் செலவு குறித்து மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அனைத்துக்கும் இம்முறை முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டம் மூலம் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இம்முறை வரவு செலவுத் திட்டமானது அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வளிப்பதாக இருக்க வேண்டும்.
கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் துறை விரிவுரையாளர் கணேசமூர்த்தி:-வரவு செலவு திட்ட இடைவெளியை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ள கூடியதான வரவு செலவு திட்டமே சிறந்தது. அரசின் நடைமுறை செலவுகளை குறைத்து மூலதன செலவுகளை அதிகரிக்க வேண்டும். அமைச்சுக்களுக்கான செலவுகளை குறைத்து துண்டுவிழும் தொகையை குறைத்து நாட்டில் பணவீக்கம் ஏற்படாதவாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். கடந்த வருட வரவு செலவு திட்டத்தில் வர்த்தக சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டனர். இம்முறை அவ்வாறான புறக்கணிப்புக்கள் இன்றியும் கைத்தொழில் துறை மற்றும் சேவைத்துறையை கவனத்திற் கொண்டதாகவும் வரவு செலவுத் திட்டம் அமைய வேண்டும்.
வர்த்தகர் சுப்பிரமணியம்கடந்த வருடம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் இறக்குமதி பொருட்களுக்கான வரி பெருமளவில் அதிகரிக்கப்பட்டது. இதனால் நாம் பெரிதும் பாதிக்கப்பட்டோம். அது மாத்திரமன்றி வர்த்தக சமூகத்தை ஊக்குவிக்கக் கூடிய எந்தவொரு முன்மொழிவுகளும் இடம்பெறவில்லை. நகர்ப்புறத்தை மையமாக கொண்ட வரவு செலவு திட்டம் முன்வைக்கப்படவில்லை. கிராமங்களை மையமாக கொண்ட வரவு செலவு திட்டமே முன்வைக்கப்பட்டது. அதனால் இம்முறை இப்பிழைகள் தவிர்க்கப்படும் என நம்புகின்றேன்.
குடும்ப தலைவி எஸ்.இதயமலர்நாட்டில் ஊழல் மோசடி அதிகரித்துள்ளது இது குறைந்தால் பொருட்களின் விலைகள் குறையும். பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் தற்போது இப்பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது என்றார்.
இந்த எதிர்பார்ப்புக்கள் இவ்வாறிருக்க, இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் போது வாழ்க்;கைச் செலவைக் குறைத்தல், பிரதேச மற்றும் தேசிய அளவிலான அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான விடயங்கள் போன்றன உள்ளடக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய நிலைமையில் மக்கள் அதிகரித்து வரும் பொருட்களின் விலையேற்றத்தால் பாரிய பிரச்சினைக்குள் சிக்குண்டுள்ளனர். அதனால் அரசின் புதிய வரவு செலவுத்திட்ட அறிக்கை எதிர்நோக்கும் பிரதான சவால் மக்களின் வாழ்க்கைச் செலவைக்குறைப்பதாகும். இதேபோன்று அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதுடன் இதற்கு சமனாக இலங்கை ரூபாவின் பெறுமதியும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் நாம் இறக்குமதி செய்யும் பொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதுடன் அதற்காக நாம் செலுத்தும் பணமும் அதிகரிக்கப்படுகிறது. இதனை ஈடுசெய்ய அரசாங்கம் பெற்றுக்கொள்ளும் கடனும் அதிகரிக்கப்படுவதுடன் அதற்காக செலுத்தும் வட்டியும் குட்டி போடுகிறது.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக எல்.ரி.ரி.ஈ இயக்கத்தினால் தேசிய பாதுகாப்புக்கு விடப்படும் சவாலை எதிர்கொள்ளவும் அரசினால் பாரியளவு பணம் செலவிடப்படுகிறது.இவ்வாறான விடயங்களைக் கருத்திற் கொள்ளும் போது தற்போது அரசாங்கம் பொருளாதாரம் மற்றும் வர்த்தக சூழ்நிலைகளுக்கு ஏற்ற சர்வதேச சவாலை எதிர்கொண்டு தீர்வு காணும் காலகட்டத்துக்கு வந்துள்ளது.
இந்த அனைத்து சுமைகளையும் மக்கள் மீது சுமத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்;.2008ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவில் எல்லா பிரச்சினைகளுக்குமான தீர்வு கிடைக்கும் என நம்பியிருக்கும்; மக்களை ஏமாற்றாத வகையில் அரசு செயற்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு இன்னும் 5நாட்களே உள்ளன. எதிர்வரும் 7ஆம் திகதி நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் 2008 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்;பிக்கப்படவுள்ளது. இது மஹிந்த சிந்தனையின் கீழ் சமர்ப்பிக்கப்படும் மூன்றாவது வரவு செலவுத் திட்டமாகும்.
வரவு செலவுத் திட்டத்தோடிணைந்து அரசியலிலும் பிரச்சினைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. பொருட்களின் விலையேற்றத்தால் பாரிய வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்குள்; சிக்குண்டுள்ள மக்களின் எதிர்பார்ப்பு புதிய வரவு செலவுத் திட்டம் இதற்கெல்லாம் சுமுகமான தீர்வொன்றைப் பெற்றுத்தரும் என்பதே ஆகும்.இந்த வரவு செலவுத் திட்டம் மக்கள் மத்தியில் மட்டுமன்றி அரசியல்வாதிகள் பொருளாதார நிபுணர்கள் மத்தியிலம் பலத்த எதிர்பார்ப்பினைத் தோற்றுவித்துள்ளது.அந்த வகையில் வரவு செலவுத் திட்டம் குறித்து சிலர் வீச்சுக்காகத் தெரிவித்தவை இவை.
ஐ.தே.க.வின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க
எமது அரசாங்கம் சகல நடவடிக்கைகளிலும் போரை முன்னிலைப்படுத்துகிறது. அந்த முன்னுரிமை இம்முறை வரவு செலவுத் திட்டத்துக்கும் வழங்கப்பட்டிருக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன். ஆனால் இன்றைய சூழ்நிலையில் எமது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை பொருட்களின் விலையேற்றமே. இது பற்றி உரிய அமைச்சர்களிடம் கேட்டால் உலக சந்தையில் நிலவும் பொருட்களின் விலையேற்றமே இதற்குக் காரணம் என்கிறார்கள். உண்மையில் உலக சந்தையின் பொருள்; விலையேற்றம் எமது நாட்டில் மட்டுமா பாதிப்பை ஏற்படுத்துகிறது. உலகின் வேறு நாடுகளுக்கு அந்த பாதிப்பு இருப்பதாக தெரியவில்லையே.
பாராளுமன்ற உறுப்பினர்ஸ்ரீபதி சூரியாராச்சி;மஹிந்த சிந்தனையில் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் ஒழுங்காகக் கடைபிடிக்காமையே இங்குள்ள பிரச்சினை. வாழ்க்கைச் செலவு குறித்து மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அனைத்துக்கும் இம்முறை முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டம் மூலம் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இம்முறை வரவு செலவுத் திட்டமானது அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வளிப்பதாக இருக்க வேண்டும்.
கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் துறை விரிவுரையாளர் கணேசமூர்த்தி:-வரவு செலவு திட்ட இடைவெளியை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ள கூடியதான வரவு செலவு திட்டமே சிறந்தது. அரசின் நடைமுறை செலவுகளை குறைத்து மூலதன செலவுகளை அதிகரிக்க வேண்டும். அமைச்சுக்களுக்கான செலவுகளை குறைத்து துண்டுவிழும் தொகையை குறைத்து நாட்டில் பணவீக்கம் ஏற்படாதவாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். கடந்த வருட வரவு செலவு திட்டத்தில் வர்த்தக சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டனர். இம்முறை அவ்வாறான புறக்கணிப்புக்கள் இன்றியும் கைத்தொழில் துறை மற்றும் சேவைத்துறையை கவனத்திற் கொண்டதாகவும் வரவு செலவுத் திட்டம் அமைய வேண்டும்.
வர்த்தகர் சுப்பிரமணியம்கடந்த வருடம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் இறக்குமதி பொருட்களுக்கான வரி பெருமளவில் அதிகரிக்கப்பட்டது. இதனால் நாம் பெரிதும் பாதிக்கப்பட்டோம். அது மாத்திரமன்றி வர்த்தக சமூகத்தை ஊக்குவிக்கக் கூடிய எந்தவொரு முன்மொழிவுகளும் இடம்பெறவில்லை. நகர்ப்புறத்தை மையமாக கொண்ட வரவு செலவு திட்டம் முன்வைக்கப்படவில்லை. கிராமங்களை மையமாக கொண்ட வரவு செலவு திட்டமே முன்வைக்கப்பட்டது. அதனால் இம்முறை இப்பிழைகள் தவிர்க்கப்படும் என நம்புகின்றேன்.
குடும்ப தலைவி எஸ்.இதயமலர்நாட்டில் ஊழல் மோசடி அதிகரித்துள்ளது இது குறைந்தால் பொருட்களின் விலைகள் குறையும். பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் தற்போது இப்பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது என்றார்.
இந்த எதிர்பார்ப்புக்கள் இவ்வாறிருக்க, இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் போது வாழ்க்;கைச் செலவைக் குறைத்தல், பிரதேச மற்றும் தேசிய அளவிலான அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான விடயங்கள் போன்றன உள்ளடக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய நிலைமையில் மக்கள் அதிகரித்து வரும் பொருட்களின் விலையேற்றத்தால் பாரிய பிரச்சினைக்குள் சிக்குண்டுள்ளனர். அதனால் அரசின் புதிய வரவு செலவுத்திட்ட அறிக்கை எதிர்நோக்கும் பிரதான சவால் மக்களின் வாழ்க்கைச் செலவைக்குறைப்பதாகும். இதேபோன்று அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதுடன் இதற்கு சமனாக இலங்கை ரூபாவின் பெறுமதியும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் நாம் இறக்குமதி செய்யும் பொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதுடன் அதற்காக நாம் செலுத்தும் பணமும் அதிகரிக்கப்படுகிறது. இதனை ஈடுசெய்ய அரசாங்கம் பெற்றுக்கொள்ளும் கடனும் அதிகரிக்கப்படுவதுடன் அதற்காக செலுத்தும் வட்டியும் குட்டி போடுகிறது.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக எல்.ரி.ரி.ஈ இயக்கத்தினால் தேசிய பாதுகாப்புக்கு விடப்படும் சவாலை எதிர்கொள்ளவும் அரசினால் பாரியளவு பணம் செலவிடப்படுகிறது.இவ்வாறான விடயங்களைக் கருத்திற் கொள்ளும் போது தற்போது அரசாங்கம் பொருளாதாரம் மற்றும் வர்த்தக சூழ்நிலைகளுக்கு ஏற்ற சர்வதேச சவாலை எதிர்கொண்டு தீர்வு காணும் காலகட்டத்துக்கு வந்துள்ளது.
இந்த அனைத்து சுமைகளையும் மக்கள் மீது சுமத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்;.2008ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவில் எல்லா பிரச்சினைகளுக்குமான தீர்வு கிடைக்கும் என நம்பியிருக்கும்; மக்களை ஏமாற்றாத வகையில் அரசு செயற்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
ஓயாத சுனாமி
ஆக்கம்:- மேனகா மூக்காண்டி
மொரட்டுவை, முத்துவளி வீதி, இல:-31ரி இல் வசிக்கும் என்.டப் ளியூ பெனடிக் சில்வாவின்; வீடு சுனாமியால் பாதிக்கப்பட்டது. இதற் ;காக அரசினால் வழங்கப்படும் உதவித் தொகை (வீடொன்றை நிர்மாணிப்பதற்காக) இதுவரையில் அவருக்கு வழங்கப்படவில்லை. அதனால் உங்கள் அவதானத்தை குறிப்பிட்ட நபர் மீது செலுத்துமா றும் அவருக்குரிய உதவிகளை உடனடியாக வழங்குமாறும் கேட்கி றேன்.

இப்படியொரு கடிதம் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உதவு மாறு கோரி மேல்மாகாண முதல மைச்சரின் செயலாளரினால் மொர ட்டுவை பிரதேச செயலாளருக்கு எழுதப்பட்டது. இது 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் திக தி எழுதப்பட்டுள்ளது. இக்கடிதம் எ ழுதப்பட்டு சுமார் ஒரு வருட கால மாகின்ற போதிலும் முதலமைச்சின் செயலாளரின் வேண்டுகோள் இது வரையில் நிறைவேற்றப்படவில்லை. எனதெரிகிறது.
பெனடிக் சில்வாவிற்;கு உதவுமாறு கோரி முதலமைச்சின் செயலாளர் மட்டுமன்றி பாராளுமன்ற அலுவல் கள் அமைச்சின் செயலாளர், இல ங்கை செஞ்சிலுவைச் சங்க உறுப் பினர்கள், மொரட்டுவை மாநகர சபை மேயர், கட்டுகுருந்த கிராம சேவகர் போன்றோரினாலும் மேற் படி பிரதேச செயலாளருக்கு கடிதங் கள் எழுதப்பட்டுள்ளதுடன் அவர் உண்மையிலேயே சுனாமியால் பா திக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான சகல ஆதாரங்களையும் பெனடிக் வைத்திருக்கிறார். இக்கடி தங்கள் மட்டுமன்றி அவரின் வாக் காளர் அட்டை, பதிவுத் திருமணப் பத்திரம் போன்றனவும் அவரது பதி வை உறுதிப்படுத்துகின்றன. இவை அனைத்தும் இருந்த போதிலும் பெனடிக்குக்குக்கான சுனாமி ஆதா ரங்கள் எதுவும் குறி;ப்பிட்ட இம்மூன்று வருடங்களுள் கிடைக்க வில்லை.
சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு அரசாங்கத்தால் 7இலட்சத்து 50ஆயிரம் ரூபா வழ ங்கப்படுமென சுனாமி ஏற்பட்ட கால த்திலேயே ஜனாதிபதியால் அறிவிக் கப்பட்டது. இவற்றில் 250,000 ஆயி ரம் ரூபா அரச சார்பற்ற நிறுவனங் களின் உதவியுடனேயே அரசாங்க த்தால் வழங்கப்படுகிறது. இங்கு குறிப்பிடப்பட்ட எவ்வித பண உத விகளும் இதுவரையில் பெனடிக் குக்கு வழங்கப்படவில்லை. இது குறித்து அப்பிரதேச கிராம சேவ கரிடமும் பிரதேச சபை அதிகாரி யிடமும் கேட்டபோது சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கு வதற்காக வழங்கப்பட்ட பணம் அனைத்தும் முடிவடைந்து விட்ட தாக தெரிவிக்கின்றனர். பெனடிக் மட்டுமல்ல. சுனாமியால் பாதிக்கப் பட்ட பலரின் நிலமைகளும் இப்ப டித்தானிருக்கின்றன.
சுனாமியால் பாதிக்கப்பட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மக்களில் இன்னமும் குறி ப்பிட்ட சிலர் முகாம்களிலேயே தங்கியிருக்கின்றனர். “சுனாமியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வீடு கள் அமைத்துக்கொடுக்கப்படும், அதுவரையில் நீங்கள் தற்காலிக குடியேற்றங்களிலேயே தங்கியிரு ங்கள”; என்று கூறிய அரசாங்கம் சுனாமி ஏற்பட்டு 3 வருடங்களாகி ன்ற போதிலும் இதுவரையில் அம்ம க்களின் பிரச்சினைகள் தீரும் வகை யிலான நடவடிக்கைகளை சரியாக மேற்கொண்டதாகத் தெரியவில்லை.இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு கிடைத்த பணம் மற்றும் பொருள் உதவிகள் எங்கே?என்ற கேள்வி தொடர்ந்தவண்ணமே உள் ளது. மேற்குறிப்பிட்ட பெனடிக்கின் பிரச்சினை ஒருவகை என்றால் தெ ஹிவளை, ஓபன் பெதெசவில் வசி த்து வரும் விதானகே சம்பத் பர் ணாந்து வேறுவகையிலான பிரச்சி னையை சந்தித்துள்ளார். அதாவது அரசினால் வழங்கப்படுவதாக கூறப் பட்ட 750,000 ரூபாவில் முதல் 250,000 ரூபா வழங்கப்பட்டுள்ளது. இதைக்கொண்டு அலுபோமுள்ள எனும் பிரதேசத்தில் நிலமொன் றைக் கொள்வனவு செய்துள்ள இவர் வீட்டை நிர்மாணிப்பதற்காக எஞ்சிய பணத்தைக் கேட்டு கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலாளரிடம் சென்ற போது அங்கு அவர்கள் அரசாங்கத்திடம் பணமில் லை, இதற்காக வழங்கப்பட்ட பணம் முழுவதும் முடிவடைந்து விட்டது எனத் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறாக இன்னமும் நிவாரணம் கிடைக்காத நிலையில் ஆயிரக்கணக்கானோர் இருக்கத்தா ன் செய்கின்றனர். இதேசமயம் மட்ட க்குளியில் ரி.மகேந்திரன் தனது பிரச்சினையை இப்படிச் சொல்கி றார். “;சுனாமி அனர்த்தம் காரண மாக நாம் தற்காலிக குடியேற்ற முகாம்களுக்கு தங்குவதற்காக சென்றோம். சுனாமி ஏற்பட்டு சில காலங்களுக்கு பின்பு நாம் எமது சொந்த இடங்களுக்கு செல்ல முற்பட்ட போது அரச அதிகாரிக ள் அதற்கான அனுமதியை வழங்க வில்லை. அதனால் நாம் இன்னமும் இந்த தற்காலிக முகாம்களிலேயே தங்கியிருக்கின்றோம்.மகேந்திரனின் கூற்றின்படி சுனாமியால் பாதிக்கப்ப ட்ட மக்களை தமது சொந்த இடங் களில் குடியேற்ற அரசாங்கம் விடு வதாக இல்லை. காரணம் கேட்டால் கடற்கரையிலிருந்து 300 மீற்றர் தூரம் வரையில் எவரும் குடியிரு க்க கூடாது. அது அவர்களுக்கு பாதுகாப்பில்லை என்று தெரிவிக்கி றது. இப்படி கூறும் அரசாங்கம் அவர்கள் கூறிய தூரத்துக்குள் உல்லாச விடுதிகளை மட்டும் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. இவை கடற்கரையிலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவிலேயே அமைக்கப்பட்டுள்ளதுடன் இது குறி த்து அரச அதிகாரிகளிடம் கேட்டா ல் “மீண்டும் அனர்த்தம் ஒன்று ஏற்பட்டால் அதனை இவ்விடுதிக ளை நடத்துவோரால் ஈடுசெய்ய முடியும்.” என்று தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் நக்பர் இவ்வாறு கூறுகிறார்:- இம்மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுள் 55 வீத மானோருக்கே அரசினால் வழங்க ப்பட்ட உதவிகள் கிடைக்கப்பெற் றன. இவ்வுதவிகள் கிடைக்காதவர் கள் இன்னமும் முகாம்களிலேயே தங்கியுள்ளனர். இது போன்றே இம் மக்களின் நலன்களுக்காக மேற் கொள்ளப்பட்ட சுகாதாரச் செயற ;பாடுகள் 60 வீதமளவிலும் வீதி புன ரமைப்பு நடவடிக்கைகள் 40 வீதமளவிலும் மீன்பிடித் தொழிலை செய்வதற்கான வசதி வாய்ப்புக்கள் 60 வீதமளவிலும் விவசாய நடவடி க்கைகள் 20 வீதமளவிலும் மற்றும் அடிப்படைத் தேவைப் பூர்த்தி 25 வீதமளவிலுமே மேற்கொள்ளப்பட் டுள்ளன என்கிறார். இவ்வாறான நடவடிக்கைகளினூடாக சுனாமி யால் அழிவுற்ற பொது நல விடயங் களின் அபிவிருத்திக்கு பணம் செல வளித்திருக்கும் அளவுக்கு மக்களி ன் அடிப்படைத் தேவைகளை நிவர்த் தி செய்ய தவறியிருக்கிறது அரசாங்கம். உண்மையில் ஒரு நாட்டின் பொது நலத் தேவைகளை மட்டும் அபிவிருத்திசெய்வதன் மூல ம் ஒரு நாட்டினை அபிவிருத்தி செய்ய முடியுமா என்பது கேள்விக் குறியே. தனிமனித அடிப்படைத் தேவைகளும் ஒரு நாட்டின் அபிவி ருத்தியில் பங்குகொள்கின்றது அல் லவா? அந்த வகையில் எமது நாட்டு அரசாங்கம் நாட்டின் பொது நலத் தேவைகளை மட்டுமே கவனத்தில் கொண்டு செயற்பட்டிருப்பதை மேற் குறிப்பிட்ட மக்களின் கூற்றுக்களில் இருந்து அறிய முடிகின்றது. பொது உடமைகளை அபிவிருத்தி செய்வ தென்பது மிகவும் முக்கியமான விட யமே. ஆயினும் தனிமனித அடிப் படைத் தேவைகளிலும் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.அதே நேரம் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள முகாம்களின் எண்ணிக்கையையும் குறைக்கும் முகமாக தற்காலிக முகாம்களை மூடிவிடுவதுடன் அங்கு தங்கியிரு ந்த மக்கள் அனைவரையும் ஒரே முகாமுக்குள் கொண்டுவர ஏற்பாடு கள் நடைபெறுகின்றன. நிர்வாகச் சீர்கேடுகள் அல்லது சுனாமி முகா மைத்துவ குறைபாடுகள் காரணமா க இன்னும் நிவாரணத்துக்கு மக்கள் அலைந்து கொண்டிருக்கி றார்கள். இந்த நிலையில் முகாம் களை மூடுவது குறித்து அரசு எத்த கைய நடவடிக்கைகளை எடுக்க மு டியும்என்பதையும் கவனம் செலுத்த வேண்டும்.
மொரட்டுவை, முத்துவளி வீதி, இல:-31ரி இல் வசிக்கும் என்.டப் ளியூ பெனடிக் சில்வாவின்; வீடு சுனாமியால் பாதிக்கப்பட்டது. இதற் ;காக அரசினால் வழங்கப்படும் உதவித் தொகை (வீடொன்றை நிர்மாணிப்பதற்காக) இதுவரையில் அவருக்கு வழங்கப்படவில்லை. அதனால் உங்கள் அவதானத்தை குறிப்பிட்ட நபர் மீது செலுத்துமா றும் அவருக்குரிய உதவிகளை உடனடியாக வழங்குமாறும் கேட்கி றேன்.
இங்ஙனம்,
உண்மையுள்ள,
டொனல்ட் அபேசுந்தர.

இப்படியொரு கடிதம் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உதவு மாறு கோரி மேல்மாகாண முதல மைச்சரின் செயலாளரினால் மொர ட்டுவை பிரதேச செயலாளருக்கு எழுதப்பட்டது. இது 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் திக தி எழுதப்பட்டுள்ளது. இக்கடிதம் எ ழுதப்பட்டு சுமார் ஒரு வருட கால மாகின்ற போதிலும் முதலமைச்சின் செயலாளரின் வேண்டுகோள் இது வரையில் நிறைவேற்றப்படவில்லை. எனதெரிகிறது.
பெனடிக் சில்வாவிற்;கு உதவுமாறு கோரி முதலமைச்சின் செயலாளர் மட்டுமன்றி பாராளுமன்ற அலுவல் கள் அமைச்சின் செயலாளர், இல ங்கை செஞ்சிலுவைச் சங்க உறுப் பினர்கள், மொரட்டுவை மாநகர சபை மேயர், கட்டுகுருந்த கிராம சேவகர் போன்றோரினாலும் மேற் படி பிரதேச செயலாளருக்கு கடிதங் கள் எழுதப்பட்டுள்ளதுடன் அவர் உண்மையிலேயே சுனாமியால் பா திக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான சகல ஆதாரங்களையும் பெனடிக் வைத்திருக்கிறார். இக்கடி தங்கள் மட்டுமன்றி அவரின் வாக் காளர் அட்டை, பதிவுத் திருமணப் பத்திரம் போன்றனவும் அவரது பதி வை உறுதிப்படுத்துகின்றன. இவை அனைத்தும் இருந்த போதிலும் பெனடிக்குக்குக்கான சுனாமி ஆதா ரங்கள் எதுவும் குறி;ப்பிட்ட இம்மூன்று வருடங்களுள் கிடைக்க வில்லை.
சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு அரசாங்கத்தால் 7இலட்சத்து 50ஆயிரம் ரூபா வழ ங்கப்படுமென சுனாமி ஏற்பட்ட கால த்திலேயே ஜனாதிபதியால் அறிவிக் கப்பட்டது. இவற்றில் 250,000 ஆயி ரம் ரூபா அரச சார்பற்ற நிறுவனங் களின் உதவியுடனேயே அரசாங்க த்தால் வழங்கப்படுகிறது. இங்கு குறிப்பிடப்பட்ட எவ்வித பண உத விகளும் இதுவரையில் பெனடிக் குக்கு வழங்கப்படவில்லை. இது குறித்து அப்பிரதேச கிராம சேவ கரிடமும் பிரதேச சபை அதிகாரி யிடமும் கேட்டபோது சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கு வதற்காக வழங்கப்பட்ட பணம் அனைத்தும் முடிவடைந்து விட்ட தாக தெரிவிக்கின்றனர். பெனடிக் மட்டுமல்ல. சுனாமியால் பாதிக்கப் பட்ட பலரின் நிலமைகளும் இப்ப டித்தானிருக்கின்றன.
சுனாமியால் பாதிக்கப்பட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மக்களில் இன்னமும் குறி ப்பிட்ட சிலர் முகாம்களிலேயே தங்கியிருக்கின்றனர். “சுனாமியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வீடு கள் அமைத்துக்கொடுக்கப்படும், அதுவரையில் நீங்கள் தற்காலிக குடியேற்றங்களிலேயே தங்கியிரு ங்கள”; என்று கூறிய அரசாங்கம் சுனாமி ஏற்பட்டு 3 வருடங்களாகி ன்ற போதிலும் இதுவரையில் அம்ம க்களின் பிரச்சினைகள் தீரும் வகை யிலான நடவடிக்கைகளை சரியாக மேற்கொண்டதாகத் தெரியவில்லை.இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு கிடைத்த பணம் மற்றும் பொருள் உதவிகள் எங்கே?என்ற கேள்வி தொடர்ந்தவண்ணமே உள் ளது. மேற்குறிப்பிட்ட பெனடிக்கின் பிரச்சினை ஒருவகை என்றால் தெ ஹிவளை, ஓபன் பெதெசவில் வசி த்து வரும் விதானகே சம்பத் பர் ணாந்து வேறுவகையிலான பிரச்சி னையை சந்தித்துள்ளார். அதாவது அரசினால் வழங்கப்படுவதாக கூறப் பட்ட 750,000 ரூபாவில் முதல் 250,000 ரூபா வழங்கப்பட்டுள்ளது. இதைக்கொண்டு அலுபோமுள்ள எனும் பிரதேசத்தில் நிலமொன் றைக் கொள்வனவு செய்துள்ள இவர் வீட்டை நிர்மாணிப்பதற்காக எஞ்சிய பணத்தைக் கேட்டு கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலாளரிடம் சென்ற போது அங்கு அவர்கள் அரசாங்கத்திடம் பணமில் லை, இதற்காக வழங்கப்பட்ட பணம் முழுவதும் முடிவடைந்து விட்டது எனத் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறாக இன்னமும் நிவாரணம் கிடைக்காத நிலையில் ஆயிரக்கணக்கானோர் இருக்கத்தா ன் செய்கின்றனர். இதேசமயம் மட்ட க்குளியில் ரி.மகேந்திரன் தனது பிரச்சினையை இப்படிச் சொல்கி றார். “;சுனாமி அனர்த்தம் காரண மாக நாம் தற்காலிக குடியேற்ற முகாம்களுக்கு தங்குவதற்காக சென்றோம். சுனாமி ஏற்பட்டு சில காலங்களுக்கு பின்பு நாம் எமது சொந்த இடங்களுக்கு செல்ல முற்பட்ட போது அரச அதிகாரிக ள் அதற்கான அனுமதியை வழங்க வில்லை. அதனால் நாம் இன்னமும் இந்த தற்காலிக முகாம்களிலேயே தங்கியிருக்கின்றோம்.மகேந்திரனின் கூற்றின்படி சுனாமியால் பாதிக்கப்ப ட்ட மக்களை தமது சொந்த இடங் களில் குடியேற்ற அரசாங்கம் விடு வதாக இல்லை. காரணம் கேட்டால் கடற்கரையிலிருந்து 300 மீற்றர் தூரம் வரையில் எவரும் குடியிரு க்க கூடாது. அது அவர்களுக்கு பாதுகாப்பில்லை என்று தெரிவிக்கி றது. இப்படி கூறும் அரசாங்கம் அவர்கள் கூறிய தூரத்துக்குள் உல்லாச விடுதிகளை மட்டும் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. இவை கடற்கரையிலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவிலேயே அமைக்கப்பட்டுள்ளதுடன் இது குறி த்து அரச அதிகாரிகளிடம் கேட்டா ல் “மீண்டும் அனர்த்தம் ஒன்று ஏற்பட்டால் அதனை இவ்விடுதிக ளை நடத்துவோரால் ஈடுசெய்ய முடியும்.” என்று தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் நக்பர் இவ்வாறு கூறுகிறார்:- இம்மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுள் 55 வீத மானோருக்கே அரசினால் வழங்க ப்பட்ட உதவிகள் கிடைக்கப்பெற் றன. இவ்வுதவிகள் கிடைக்காதவர் கள் இன்னமும் முகாம்களிலேயே தங்கியுள்ளனர். இது போன்றே இம் மக்களின் நலன்களுக்காக மேற் கொள்ளப்பட்ட சுகாதாரச் செயற ;பாடுகள் 60 வீதமளவிலும் வீதி புன ரமைப்பு நடவடிக்கைகள் 40 வீதமளவிலும் மீன்பிடித் தொழிலை செய்வதற்கான வசதி வாய்ப்புக்கள் 60 வீதமளவிலும் விவசாய நடவடி க்கைகள் 20 வீதமளவிலும் மற்றும் அடிப்படைத் தேவைப் பூர்த்தி 25 வீதமளவிலுமே மேற்கொள்ளப்பட் டுள்ளன என்கிறார். இவ்வாறான நடவடிக்கைகளினூடாக சுனாமி யால் அழிவுற்ற பொது நல விடயங் களின் அபிவிருத்திக்கு பணம் செல வளித்திருக்கும் அளவுக்கு மக்களி ன் அடிப்படைத் தேவைகளை நிவர்த் தி செய்ய தவறியிருக்கிறது அரசாங்கம். உண்மையில் ஒரு நாட்டின் பொது நலத் தேவைகளை மட்டும் அபிவிருத்திசெய்வதன் மூல ம் ஒரு நாட்டினை அபிவிருத்தி செய்ய முடியுமா என்பது கேள்விக் குறியே. தனிமனித அடிப்படைத் தேவைகளும் ஒரு நாட்டின் அபிவி ருத்தியில் பங்குகொள்கின்றது அல் லவா? அந்த வகையில் எமது நாட்டு அரசாங்கம் நாட்டின் பொது நலத் தேவைகளை மட்டுமே கவனத்தில் கொண்டு செயற்பட்டிருப்பதை மேற் குறிப்பிட்ட மக்களின் கூற்றுக்களில் இருந்து அறிய முடிகின்றது. பொது உடமைகளை அபிவிருத்தி செய்வ தென்பது மிகவும் முக்கியமான விட யமே. ஆயினும் தனிமனித அடிப் படைத் தேவைகளிலும் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.அதே நேரம் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள முகாம்களின் எண்ணிக்கையையும் குறைக்கும் முகமாக தற்காலிக முகாம்களை மூடிவிடுவதுடன் அங்கு தங்கியிரு ந்த மக்கள் அனைவரையும் ஒரே முகாமுக்குள் கொண்டுவர ஏற்பாடு கள் நடைபெறுகின்றன. நிர்வாகச் சீர்கேடுகள் அல்லது சுனாமி முகா மைத்துவ குறைபாடுகள் காரணமா க இன்னும் நிவாரணத்துக்கு மக்கள் அலைந்து கொண்டிருக்கி றார்கள். இந்த நிலையில் முகாம் களை மூடுவது குறித்து அரசு எத்த கைய நடவடிக்கைகளை எடுக்க மு டியும்என்பதையும் கவனம் செலுத்த வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)